
மார்ச் மாதம் இந்தியாவில் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று, கடந்த சில மாதங்களாக சற்று தணிந்திருந்த நிலையில் மீண்டும் மிகவும் வேகமாக பரவி வருகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் முக கவசம் மற்றும் தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பதால் கொரோனா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள முடியும் என சமூக ஆர்வலர்கள், மருத்துவர்கள், மற்றும் சுகாதார துறை அதிகாரிகளும் வலியுறுத்தி வருகிறார்கள்.
மேலும் ஷூட்டிங் மற்றும் பிற பணிகளுக்காக வெளியில் செல்வதாலும் பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் நடிகர் சூர்யா கொரோனாவால் பாதிக்கப்பட்டு சமீபத்தில் பூரண குணம் அடைந்தது அனைவரும் அறிந்தது தான். அவரை தொடர்ந்து, அமீர் கான், மாதவன், மாஸ்டர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது.
இவர்களை தொடர்ந்து, தற்போது பிரபல நடிகை ஒருவரும் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளேன் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு சந்தானம் நடிப்பில் வெளியான 'சக்கைபோடு போடு ராஜா' படத்தில் நாயகியாக நடித்திருந்தனர் வைபவி சாண்டில்யா. இந்த படத்தை தொடர்ந்து அடல்ட் காமெடி திரைப்படமான, 'இருட்டு அறையில் முரட்டு குத்து', போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.
இவருக்கு கொரோனா அறிகுறிகளில் தென்படவே... சோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக பசியின்மை, சுவை மற்றும் வாசனையின்மை மற்றும் இருமல் போன்ற லேசான அறிகுறிகள் தனக்கு இருப்பதாக அவர் வெளிப்படுத்தியுள்ளார், மேலும் ரசிகர்கள் இவர் விரைவாக குணமடைய வேண்டும் என வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.