'மாஸ்டர்' பட இயக்குனரை தொடர்ந்து பிரபல நாயகிக்கு கொரோனா!

By manimegalai aFirst Published Mar 30, 2021, 10:51 AM IST
Highlights

மார்ச் மாதம் இந்தியாவில் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று, கடந்த சில மாதங்களாக சற்று தணிந்திருந்த நிலையில் மீண்டும் மிகவும் வேகமாக பரவி வருகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் முக கவசம் மற்றும் தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பதால் கொரோனா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள முடியும் என சமூக ஆர்வலர்கள், மருத்துவர்கள், மற்றும் சுகாதார துறை அதிகாரிகளும் வலியுறுத்தி வருகிறார்கள்.
 

மார்ச் மாதம் இந்தியாவில் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று, கடந்த சில மாதங்களாக சற்று தணிந்திருந்த நிலையில் மீண்டும் மிகவும் வேகமாக பரவி வருகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் முக கவசம் மற்றும் தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பதால் கொரோனா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள முடியும் என சமூக ஆர்வலர்கள், மருத்துவர்கள், மற்றும் சுகாதார துறை அதிகாரிகளும் வலியுறுத்தி வருகிறார்கள்.

மேலும் ஷூட்டிங் மற்றும் பிற பணிகளுக்காக வெளியில் செல்வதாலும்  பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் நடிகர் சூர்யா கொரோனாவால் பாதிக்கப்பட்டு சமீபத்தில் பூரண குணம் அடைந்தது அனைவரும் அறிந்தது தான். அவரை தொடர்ந்து, அமீர் கான், மாதவன், மாஸ்டர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது.

இவர்களை தொடர்ந்து, தற்போது பிரபல நடிகை ஒருவரும் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளேன் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு சந்தானம் நடிப்பில் வெளியான 'சக்கைபோடு போடு ராஜா' படத்தில் நாயகியாக நடித்திருந்தனர் வைபவி சாண்டில்யா. இந்த படத்தை தொடர்ந்து அடல்ட் காமெடி திரைப்படமான, 'இருட்டு அறையில் முரட்டு குத்து', போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.  

இவருக்கு கொரோனா அறிகுறிகளில் தென்படவே... சோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.  குறிப்பாக பசியின்மை, சுவை மற்றும் வாசனையின்மை மற்றும் இருமல் போன்ற லேசான அறிகுறிகள் தனக்கு இருப்பதாக அவர் வெளிப்படுத்தியுள்ளார், மேலும் ரசிகர்கள் இவர் விரைவாக குணமடைய வேண்டும் என வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

click me!