“தலைமை இல்லாம எல்லாமே நடக்குது” - அரசியலில் களம் இறங்கும் இளையராஜா

 
Published : Apr 29, 2017, 11:42 AM ISTUpdated : Sep 19, 2018, 03:13 AM IST
“தலைமை இல்லாம எல்லாமே நடக்குது” - அரசியலில் களம் இறங்கும் இளையராஜா

சுருக்கம்

ilayaraja talks about political issue

இசையமைப்பாளர் இளையராஜா, எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும், அரசியல் விவகாரங்களில் தலையிடாமல் பேசுவார். ஆனால், கவிஞர் அப்துல் ரகுமானில் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அவர், திடீரென அரசியல் பேசினார். அப்போது, அவர் பேசியதாவது:-

விழாவுக்கு வந்தால் முதலில் இளையராஜா தலைமை தாங்குவார் என கூறுவார்கள் என எதிர்பார்த்தேன். ஆனால், யாரும் அறிவிக்கவில்லை. அறிவிச்சாங்களா... இல்ல... அப்புறம் எப்படி நான் தலைவரு... தலைவர் இல்லாம நடக்குது.

நாடு அப்படி போய்க்கிட்டு இருக்கு. நாடு அப்படி போறதால நாமும் நாட்டோட போவோம். நம்ம இல்லாம நாடு இல்ல. நாமதான் நாடு. அதனால் நான் யாருக்கும் தலைவன் அல்ல. இறைவனுக்கு மட்டும் தொண்டன்.

இவ்வாறு அவர் பேசினார்.

தமிழகத்தில் தற்போது தலைமை இல்லாமல் ஆட்சி நடப்பதாக இளையராஜா விமர்சித்தது, புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட நடிகர் கமல், ஒரு கருத்தை கூறினார். அது அமைச்சரை குறிப்பிட்டதாக கூறி, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதையொட்டி இசையமைப்பாளர் இளையராஜாவும் கருத்தை கூறி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வாழ்க்கையில் ஒரேயொரு பொய் சொன்னதற்காக வருத்தப்படும் கோமதி: உண்மையின் அடையாளம்!
5000 ரூபாயுடன் சினிமாவுக்கு வந்தவர்! 5 நிமிடத்திற்கு 3 கோடி வாங்கும் நடிகை யார்?