Ilaiyaraaja : காப்புரிமை விவகாரம்... இளையராஜா தொடர்ந்த வழக்கில் இசை நிறுவனங்களுக்கு நோட்டீஸ்

Published : Apr 05, 2022, 12:01 PM IST
Ilaiyaraaja : காப்புரிமை விவகாரம்... இளையராஜா தொடர்ந்த வழக்கில் இசை நிறுவனங்களுக்கு நோட்டீஸ்

சுருக்கம்

Ilaiyaraaja : 30 படங்களின் இசையை பயன்படுத்த, இளையராஜாவுக்கு தடை விதிக்கக் கோரி இந்தியன் ரெகார்டு உற்பத்தி நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தது.

இசையமைப்பாளர் இளையராஜா இசையமைப்பில் வெளியான 20 தமிழ் படங்கள் மற்றும் இதர மொழிகளில் வெளியான 10 படங்களுக்கு, தயாரிப்பாளர்களிடம் இருந்து பதிப்புரிமை பெற்று உள்ளதால், இந்தப் படங்களின் இசையை பயன்படுத்த, இளையராஜாவுக்கு தடை விதிக்கக் கோரி இந்தியன் ரெகார்டு உற்பத்தி நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தது.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மேற்கண்ட 30 படங்களுக்கான இசையை பயன்படுத்த இளையராஜா மற்றும் இரண்டு இசை நிறுவனங்களுக்கு தடை விதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து இசையமைப்பாளர் இளையராஜா தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இளையராஜா தரப்பில் வழக்கறிஞர்கள் தியாகராஜன், சரவணன் ஆகியோர் ஆஜராகினர். இந்த வழக்கு நீதிபதிகள் தமிழ்ச்செல்வி, துரைசாமி ஆகியோர் அடங்கிய இரண்டு நீதிபதிகள் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனு தொடர்பாக இந்தியன் ரெகார்டு உற்பத்தி நிறுவனம் உள்ளிட்ட 3 இசை நிறுவனங்கள் இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தனர்.

இதையும் படியுங்கள்... Actor Vijay : 10 ஆண்டுகளாக பிரஸ் மீட்டில் பங்கேற்காததற்கு அந்த ஒரு சம்பவம் தான் காரணம் - விஜய் பளீச் பதில்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?