விரைவில் தமிழ் சினிமாவில் நடிப்பேன்; ஹாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நம்பிக்கை.!!

By Thiraviaraj RMFirst Published Mar 1, 2020, 10:35 AM IST
Highlights

மொழிகளில் எனக்கு பாகுபாடில்லை எல்லாம் மொழியும் எனக்கு ஒன்று தான். கதைக்களம் மட்டுமே எனக்கு முக்கியம் என்று அவர் சொல்லியிருக்கிறார்.அன்றாடம் என்னை பல தென்னிந்திய இயக்குநர்கள் வந்து சந்திக்கின்றார்கள்.அவர்கள் நல்ல மற்றும் வித்யாசமான கதைக்களை  என்னிடம் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். நானும் அந்த கதைகளை கேட்கின்றேன். நிச்சயம் எனக்கு ஏற்ற நல்ல கதை அமையும்போது தென்னிந்திய மொழிகளான தமிழ்  படங்களில் விரைவில் நடிப்பேன்". 
 


T.Balamurukan
"ஐஸ்வர்யா" என்ற கன்னட படம் தீபிகா படுகோனே ஹாலிவுட் நடிகையாக்கியது.   தற்போது ஹிந்தி திரையுலகை கலக்கி வரும் முன்னணி நடிகைகளில் தீபிகா படுகோனே கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறார். கபில்தேவில் வாழக்கை வரலாற்று படத்தில் அவருடைய கணவர் ரன்வீர் கபூருடன் இணைந்து நடித்து வருகிறார். 

1983 கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியா வென்ற கதை '83' என்ற பெயரில் திரைப்படமாக உருவாகிறது. கபீர் கான் இயக்கும் இந்தப் படத்தில் ரன்வீர் சிங், கபில் தேவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துக்காக ரன்வீர் சிங்குக்குப் பயிற்சி அளித்துள்ளார் கபில் தேவ். மற்ற நடிகர்களுக்கு யஷ்பால் சர்மா, பல்விந்தர் சாது போன்ற வீரர்கள் பயிற்சி அளித்துள்ளனர். 

இந்த படத்தில் கபில்தேவாக ரன்வீரும் அவரது மனைவியாக தீபிகாவும் நடித்து வருகின்றனர். அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற தீபிகாவிடம் செய்தியாளர்கள் நீங்கள், மீண்டும் தென்னிந்திய மொழிப் படங்களில் நடிப்பீர்களா? என்று கேட்டதற்கு "நிச்சயம் வாய்ப்பு கிடைத்தால் நான் நடிப்பேன் என்று கூறினார். மொழிகளில் எனக்கு பாகுபாடில்லை எல்லாம் மொழியும் எனக்கு ஒன்று தான். கதைக்களம் மட்டுமே எனக்கு முக்கியம் என்று அவர் சொல்லியிருக்கிறார்.அன்றாடம் என்னை பல தென்னிந்திய இயக்குநர்கள் வந்து சந்திக்கின்றார்கள்.அவர்கள் நல்ல மற்றும் வித்யாசமான கதைக்களை  என்னிடம் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். நானும் அந்த கதைகளை கேட்கின்றேன். நிச்சயம் எனக்கு ஏற்ற நல்ல கதை அமையும்போது தென்னிந்திய மொழிகளான தமிழ்  படங்களில் விரைவில் நடிப்பேன்". 

click me!