பள்ளிக்கு புதிய கட்டுப்பாடு - மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவு

Published : Jun 19, 2019, 05:45 PM IST
பள்ளிக்கு புதிய கட்டுப்பாடு - மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவு

சுருக்கம்

அரசு பள்ளியில் இறைவணக்கம் செலுத்துவதற்கு, மாவட்ட கல்வி அலுவலர் கட்டுப்பாடு விதித்துள்ளார். இதனால், கல்வி ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.  

அரசு பள்ளியில் இறைவணக்கம் செலுத்துவதற்கு, மாவட்ட கல்வி அலுவலர் கட்டுப்பாடு விதித்துள்ளார். இதனால், கல்வி ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் காலையில் பள்ளி துவங்கும் முன், இறைவணக்கம் செலுத்துவார்கள். மழை காலங்களாக இருந்தாலும், மாணவர்கள் வரிசையில் நின்று தமிழ்த்தாய் வாழ்த்து, இறைவணக்கம் செலுத்துவது பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்ட கல்வி முதன்மை கல்வி அலுவலர், அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், அவர் குறிப்பிட்டு இருப்பதாவது.

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தினமும் பள்ளி தொடங்குவதற்கு முன், அப்பள்ளியின் வளாகத்தில் இறைவணக்கம் செலுத்துவது வழக்கம். இனி வரும் காலங்களில் திங்கட் கிழமைகளில் மட்டும், பள்ளி வளாகத்தில் இறைவணக்கம் செலுத்த வேண்டும்.

மற்ற நாட்களில், வெளியே நடத்த வேண்டாம். அந்தந்த வகுப்பறையில் நடத்தினால் போதும் என கூறப்பட்டுள்ளது. மாவட்ட கல்வி அலுவலரின் இந்த அறிக்கை, கல்வி ஆர்வலர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

துப்பாக்கி கொடுத்தவருடன் மோதும் எஸ்கே – ஜன நாயகன் படத்துக்கு பராசக்தி போட்டி; ஜன.,10ல் ரிலீஸ்!
கிழிந்த ஆடை அணிந்த டாக்ஸிக் நடிகை: விலை கேட்டால் அதிர்ந்து போவீர்கள்!