பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கிறார்கள்...! உண்மையை போட்டுடைத்த பிரபல நடிகை...!

First Published Jun 23, 2018, 12:34 PM IST
Highlights
give cinema chance They are invited to bed for sexual abuse


தமிழில், காந்தர்வன், சிங்கம்புலி, மல்லுக்கட்டு உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் மலையாள நடிகை ஹனிரோஸ், தற்போது இவர் கொடுத்துள்ள பேட்டியில் மலையாள திரையுலகிலும் பட வாய்ப்புக்காக படுக்கையறைக்கு நடிகைகள் அழைக்கப்படுகிறார்கள் என்று கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சினிமாவில் பாலியல் தொல்லை:

சமீப காலமாகவே அனைத்து திரையுலகை சேர்ந்த நடிகைகளும், பட வாய்ப்பு கொடுப்பதற்காக சில இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் செக்ஸ் தொல்லை கொடுப்பதாக குற்றம்சாட்டி வருகிறார்கள். சில நடிகைகள் இதனை தைரியமாக வெளிப்படையாகவே கூறியுள்ளனர்.

ஸ்ரீரெட்டி:

அந்த வகையில் நடிகை ஸ்ரீரெட்டி தெலுங்கு நடிகைகளை படுக்கைக்கு அழைத்த இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர்கள் ஆகிய பலரது பெயரை கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது இதுகுறித்து முழுமையாக விசாரணை செய்ய அரசும் , மகளிர் ஆணையமும் இறங்கி உள்ளது.

மலையாள பட உலகிலும் பாலியல் தொல்லை:

இந்நிலையில் தற்போது பிரபல மலையாள நடிகை ஹனிரோஸ் மலையாள பட உலகிலும் சினிமா படங்களில் வாய்ப்பு கொடுக்க நடிகைகள் பலர் படுக்கை அறைக்கு அழைக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் கொடுத்துள்ள பேட்டியில்...

"மலையாள பட உலகிலும் பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இருக்கிறது. ஆனால் அதை ஏற்பதும் ஏற்காததும் அவர்கள் கையில் தான் உள்ளது. நடிக்க வாய்ப்பு கேட்கும் ஆரம்ப காலத்தில் எல்லா நடிகைகளுமே போராடத்தான் வேண்டி இருக்கிறது. அப்போது சிலர் நடிகைகளை மூளைச்சலவை செய்வார்கள். நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

மேலும் இவர் நடித்த ஒன் பை டூ என்ற படத்தில் இவர் முத்த காட்சியில் நடித்ததை படக்குழுவினர் விளம்பரத்துக்கு பயன்படுத்தியது வேதனையாக இருக்கிறது என ஹனிரோஸ் மிகவும் மன வேதனையோடு கூறியுள்ளார். 
 

click me!