பிக்பாஸ் வீட்டில் மது கொடுக்கப்படுகிறதா..? வெளியே வந்த நித்யாவின் பதில்..!

First Published Jul 19, 2018, 6:53 PM IST
Highlights
give alcohol inside the bigboss home nithya open talk


பிக்பாஸ் நிகழ்ச்சியின் உள்ளே உள்ள போட்டியாளர்களுக்கு, போன், பேப்பர் என எந்த வெளியுலக தொடர்பும் இல்லை. எனினும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்கள் பலருக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இருப்பதால், புகைபிடிக்க மட்டும் அவர்களுக்கு தனி அரை கொடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் சில ரசிகர்கள், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள பிரபலங்களுக்கு அவ்வப்போது மது கொடுக்கப்படுகிறதா...? என்கிற ஒரு சந்தேகம் இருப்பதாக கூறி வந்தனர். அதற்கு காரணம் சில சமயங்களில் போட்டியாளர்கள் நடந்துக்கொண்ட விதம் என்றும் கூறலாம்.

இந்நிலையில், கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய தாடி பாலாஜியின் மனைவி நித்யாவிடம் பேட்டி ஒன்றில், பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு மது கொடுக்கப்படுகிறதா, என கேள்வி எழுப்பப்பட்டது. 

இந்த கேள்விக்கு பதிலளித்துள்ள நித்யா, புகைப்பிடிக்க சிகரெட் மட்டும் தான் கொடுக்கப்படுகிறது. மது கொடுக்கப்படுவது இல்லை. எனினும் பாலாஜி மது அருந்தாமலேயே, இரண்டாவது வாரத்தில் மிகவும் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தினார் என கூறியுள்ளார்.

 

பிக்பாஸ் வீட்டில் உள்ளே இருவரும், சில சமயங்களில் மிகவும் அன்பாக இருப்பது போல் காட்டப்பட்டாலும். நித்யா வெளியே வந்ததில் இருந்து பாலாஜியிடம் இருந்து விவாகரத்து பெற்றே தீருவேன் என்கிற நோக்கத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

click me!