
கேரளாவில் பாரன்ஸிக் எனும் பெயரில் வெளிவந்து சக்க போடு போட்ட படத்தை தமிழில் "கடைசி நொடிகள்" எனும் பெயரில் ரசிமீடியா மேக்கர்ஸ் உருவாக்கியுள்ளனர். விஸ்வசாந்தி பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தில் கொலைகாரனை கண்டுபிடிக்கும் பாரன்ஸிக் ஆபீஸராக டொவீனா தாமஸ் நடித்திருக்கிறார். மேலும் மம்தா மோகன் தாஸ், ரெபா மோனிகா, மோகன் சர்மா, பிரதாப்போத்தன் போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் இன்னும் பலரும் உண்டு.
வரிசையாக பெண் குழந்தைகள் கொலை செய்யப்படுகின்றனர். அந்த கொலைகளை செய்த கொலைகாரனை பிடிப்பதற்காக போலீஸ் ஒரு சிறப்பு படை அமைக்கிறது. அதில் உதவியாளராக பாரன்ஸிக் ஆபீஸர் ஒருவரும் நியமிக்கப்படுகிறார். கொலைகளும் கொலை நடத்திய விதமும் ஒரே மாதிரி இருப்பதால் கொலைகாரன் ஒருவரே தான் செய்திருக்கனும் என்று அந்த பாரன்ஸிக் ஆபீசர் கண்டுபிடிக்கிறார். கண்டுபிடித்து போலீஸிடம் சொன்னால் அவங்க ஏற்க மறுக்கிறார்கள்.
மெல்ல மெல்ல அந்த போலீஸ் துறையை நம்ப வைத்து அந்த கொலைகாரனை எப்படி பிடிக்கிறான் என்பது கதை. இப்படத்திற்காக பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் ஹாலிவுட் தரத்திற்குகொண்டு செல்கிறது. திரில்லர் என்றால் இதுதான் என்று ஒவ்வொரு காட்சிகளும் நெஞ்சை அள்ளிக் கொள்ளும் விதமாக "கடைசி நொடிகள்" இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த படம் தமிழில் வெளியாக உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.