பிரபல பாடகருக்கு விமான நிலையத்தில் மாரடைப்பு! மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியில் மரணம்!

Published : Nov 28, 2018, 07:13 PM IST
பிரபல பாடகருக்கு விமான நிலையத்தில் மாரடைப்பு! மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியில் மரணம்!

சுருக்கம்

இசை நிகழ்ச்சி முடிந்து வீட்டுக்கு திரும்பும் போது மாரடைப்பால் பிரபல பாடகர் மரணமடைந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இசை நிகழ்ச்சி முடிந்து வீட்டுக்கு திரும்பும் போது மாரடைப்பால் பிரபல பாடகர் மரணமடைந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேற்கு வங்கத்தை சேர்த்த பிரபல பாடகரான அஜீஸ் பெங்காலி, இந்தி, ஓடியா ஆகிய மொழிகளில் பல பாடல்களை பாடி பிரபலமானவர்.

இவர் நேற்று முன்தினம் கொல்கத்தாவில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்தவுடன் அங்கிருந்து விமானம் மூலம் மும்பைக்கு புறப்பட்டார். 

மும்பை விமான நிலையம் வந்தடைந்த அஜீஸுக்கு, திடீர் என படப்படப்பு மற்றும் நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனே அங்கிருந்து உடனடியாக அவரை கேப் மூலம் நானாவதி மருத்துவமைக்கு கொண்டு சென்றனர். 

அப்போது இவரை பரிசோதித்த மருத்துவர்கள் இவர் ஏற்கனவே மாரடைப்பு காரணமாக இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அஜீஸின் இந்த திடீர் மரணம் திரையுலகினர் மற்றும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நடமாடும் அரண்மனை! SRK-ன் பல கோடி ரூபாய் வேனிட்டி வேனுக்குள் இப்படியொரு வசதியா? மிரளவைக்கும் ரகசியம்!
மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி! 'அகண்டா 3' குறித்த அதிரடி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் பாலகிருஷ்ணா ரசிகர்கள்!