
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'வாணி ராணி', 'வள்ளி' ஆகிய சீரியல்களில் நடித்து வருபவர் நடிகர் தேசிங்கு.
கோவையைச் சேர்ந்த இவர் முக்கிய வேலை காரணமாக சபரிமலைக்கு சென்றதாக கூறப்படுகிறது. இவர் நேற்று சபரிமலை அருகே உள்ள சரங்குத்தி என்கிற இடத்தில் வந்துக்கொண்டிருந்த போது திடீர் என மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
உடனடியாக இவரை அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆயத்தம் ஆகினர். ஆனால் துரதஷ்டமாக இவர் அதற்கு முன்பே இறந்தார்.
இவரது மரணம் குறித்து அறிந்த சின்னத்திரை பிரபலங்கள் பலர் இவருடைய குடும்பத்திற்கு தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.