'சிங்கம் போல' பரவை முனியம்மா காலமானார்..!

Published : Mar 29, 2020, 07:49 AM ISTUpdated : Mar 29, 2020, 07:52 AM IST
'சிங்கம் போல' பரவை முனியம்மா காலமானார்..!

சுருக்கம்

பிரபல நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா இன்று அதிகாலையில் இயற்கை எய்தினார்.

மதுரை மாவட்டம் பரவை கிராமத்தைச் சேர்ந்தவர் முனியம்மா. நாட்டுப்புறப் பாடகி ஆன இவர் தூள் படத்தில் வரும் 'சிங்கம் போல' என்கிற பாடல் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானார். அதன்பிறகு 25க்கும் மேற்பட்ட படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். தமிழக அரசின் ‘கலைமாமணி‘ விருது உள்பட பல்வேறு விருதுகளை பெற்ற அவர், கடந்த 2014-ம் ஆண்டு வெளிவந்த சிவகார்த்திகேயன் நடித்த மான் கராத்தே படத்தில் கடைசியாக நடித்திருந்தார். அதன்பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் வரவில்லை. 83 வயதான இவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு கடும் அவதியுற்றார். சிறுநீரக கோளாறு காரணமாக அறுவை சிகிச்சை செய்து தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்தார். 

வறுமையில் வாடிய அவரிடம் சிகிச்சைக்கு போதுமான பணம் இல்லை என்ற செய்தி அறிந்து நடிகர் சங்கம் உட்பட திரையுலகைச் சேர்ந்த பலரும் உதவி செய்து இருந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலையில் மதுரையில் இருக்கும் அவரது இல்லத்தில் காலமானார். அவரது மறைவு திரைத்துறையினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அவருக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இன்று மாலையில் அவரது இல்லத்தில் இறுதிச் சடங்குகள் நடக்கும் என்று அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

2025ல் சாங்க்ஸில் பட்டைய கிளப்பிய டாப் 5 பாடல்கள்; ஓ இந்த பாடல் தான் டாப்பா?
தங்கமயிலின் 80 சவரன் நகையில் 8 சவரன் மட்டும் தங்கம் : கதிரிடம் உண்மையை வெளிப்படுத்திய ராஜீ!