பிரபல இயக்குனரின் தயார் திடீர் மரணம்..! இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள்..!

By manimegalai aFirst Published Aug 28, 2021, 10:42 AM IST
Highlights

திரையுலகில் கடந்த வருடம் முதலே, பிரபலங்கள் மற்றும் அவர்களுக்கு நெருங்கியவர்கள் மரண செய்திகள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. அந்த வகையில், தற்போது பிரபல இயக்குனரின் தாயார் உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 

திரையுலகில் கடந்த வருடம் முதலே, பிரபலங்கள் மற்றும் அவர்களுக்கு நெருங்கியவர்கள் மரண செய்திகள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. அந்த வகையில், தற்போது பிரபல இயக்குனரின் தாயார் உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழில் கடந்த 2012 ஆம் ஆண்டு,  கிராமத்து கதையம்சம் கொண்ட படமாக உருவான திரைப்படம் 'சுந்தர பாண்டியன்'. இந்த படத்தில், சசிகுமார் மற்றும் லட்சுமி மேனன் ஆகியோர் நாயகன் - நாயகியாக நடித்திருந்தனர். முதல் படத்திற்கே, சிறந்த தமிழ் படத்திற்கான தமிழ்நாடு விருது உட்பட பல்வேறு விருதுகளை பெற்றது. இந்த படத்தை இயக்கிய இயக்குனர் எஸ் ஆர் பிரபாகரன். முதல் படத்திலேயே வெற்றி இயக்குனராக அறியப்பட்டார்.

இதை தொடர்ந்து, உதயநிதி நடித்த கதிர்வேலன் காதலன், சச்திரியன் ஆகிய படங்களை இயக்கி இருந்தார். தற்போது மீண்டும் தன்னுடைய முதல் பட நாயகனான, சசிகுமாரை வைத்து, 'கொம்பு வச்ச சிங்கம்டா' என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார். 

இந்நிலையில், எஸ் ஆர் பிரபாகரின் தாயார் ராஜலெட்சுமி என்பவர், உடல் நல குறைவு காரணமாக நேற்று இரவு, அவரது சொந்த ஊரான, மதுரையில் காலமானார். இவருக்கு வயது  (வயது 66) இவர் மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் பலர் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். மேலும் இவரது இறுதி சடங்குகள் இன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!