7000 நாடக மேடை கண்ட, பிரபல நடிகர் நீலு மரணம்...! அதிர்ச்சியில் திரையுலகினர்...!

 
Published : May 10, 2018, 07:41 PM ISTUpdated : Sep 19, 2018, 02:21 AM IST
7000 நாடக மேடை கண்ட, பிரபல நடிகர் நீலு மரணம்...! அதிர்ச்சியில் திரையுலகினர்...!

சுருக்கம்

famous actor neelakandan death

தமிழ் சினிமாவில் இயக்குனர் முக்தா சீனிவாசன் இயக்கதில், நடிகர் ஜெய் சங்கர் நடித்து 1969 ஆண்டு வெளிவந்த 'ஆயிரம் பொய்' படத்தில் காமெடி கதாப்பாத்திரத்தில் அறிமுகமானவர் நடிகர் நீலகண்டன் என்கிற நீலு.

 

நாடக நடிகராக அறியப்பட்டு, தமிழ் சினிமா உள்ளே நுழைந்த இவர், இதுவரை 7000திற்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்துள்ளார். அதே போல் 150 மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பழம் பெரும் நடிகரான இவருடைய நடிப்பு அந்த கால ரசிகர்களை மட்டும் இன்றி, தற்போதைய ரசிகர்களையும் அந்நியன், தீனா, த்ரிஷா இல்ல நயன்தாரா, ஆகிய படங்கள் மூலம் வெகுவாக கவர்ந்தவை. 

இந்நிலையில், 82 வயதாகும் இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலமின்றி ஓய்வில் இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது திடீர் என இவருடைய உடல்நிலை மிகவும் மோசமாகியதைத் தொடர்ந்து மரணமடைந்துள்ளார். இந்த தகவல் திரையுலகினர் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. பிரபலங்கள் பலர் இவருடைய குடும்பத்தினரை தொடர்புக் கொண்டு தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கார் விபத்து: நடுரோட்டில் பஞ்சாயத்தை முடித்து வைத்த சிவகார்த்திகேயன்! ரியல் லைஃப் 'அமரன்' என பாராட்டும் ரசிகர்கள்!
கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்