19 வருட கனவு நினைவாகியது... திரையுலகில் புதிய அவதாரம் எடுத்த நடிகர் ஜெய்!!

By manimegalai aFirst Published Sep 22, 2021, 1:48 PM IST
Highlights

நடிகர் ஜெய் ஒரு இசையமைப்பாளராக மாற வேண்டும் என்கிற கனவோடு தான் திரையுலகில் நுழைந்தாலும், அவரே எதிர்பாராமல் நடிகராக மாறினார். இந்நிலையில் 19 வருடத்திற்கு பின் தன்னுடைய கனவு நினைவாகி விட்டதாக, சமூக வலைத்தளத்தில் மிகவும் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

நடிகர் ஜெய் ஒரு இசையமைப்பாளராக மாற வேண்டும் என்கிற கனவோடு தான் திரையுலகில் நுழைந்தாலும், அவரே எதிர்பாராமல் நடிகராக மாறினார். இந்நிலையில் 19 வருடத்திற்கு பின் தன்னுடைய கனவு நினைவாகி விட்டதாக, சமூக வலைத்தளத்தில் மிகவும் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

நடிகர் ஜெய் 'சென்னை 600028 ' படத்தை தொடர்ந்து நடித்த, 'சுப்ரமணியபுரம்' படம், அவரது திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த போதிலும், அடுத்தடுத்த படங்களை சரியாக தேர்வு செய்வதில் கோட்டை விட்டதால் பட வாய்ப்புகளை இழந்தார். எனினும் அவ்வப்போது இவர் நடிப்பில் வெளியான 'எங்கேயும் எப்போதும்', 'ராஜா ராணி' போன்ற படங்களுக்கு மீண்டும் வரவேற்பு கிடைக்கவே ஹீரோவாக நடிக்க துவங்கினார். அதே நேரத்தில் சரியாக படப்பிடிப்புகளில் கலந்து கொள்வது இல்லை என்பது போன்ற சர்ச்சைகளில் சிக்கினார்.

கடந்த ஆண்டு இவருடைய நடிப்பில் ஒரு படம் கூட வெளியாகவில்லை என்றாலும், தற்போது இவரின் கை வசம், 'பிரேக்கிங் நியூஸ்', 'பார்ட்டி', 'குற்றமே குற்றம்', கோபி நைனார் இயக்கத்தில் ஒரு படம், இயக்குனர் பத்ரி இயக்கத்தில், சுந்தர் சி தயாரிப்பில் ஒரு படம் என சுமார் 7 படங்கள் உள்ளது. இதில் சில படங்களின் படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் தொடர்ந்து இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அதில் 'குற்றமே குற்றம்' படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில் தற்போது 'சிவ சிவா' எனும் திரைப்படத்தில் நடித்துவருகிறார். அதோடு இந்தப் படத்தின் இசையமைப்பாளராகவும் அவர் பணியாற்றி உள்ளார். இதன் மூலம் தன்னுடைய 19 வருட கனவு நிறைவேறிவிட்டதாக, ஜெய் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் மிகவும் உருக்கமாக கூறியுள்ளார்.

இந்த படத்தில் ஜெய், 'சுப்ரமணியபுரம்' பட ஸ்டைலில் தாடி வைத்து, கைலியை மடித்து கட்டி, கிராமத்து இளைஞர்ராக நடித்துள்ளார். மேலும் இதுவரை இவர் நடித்துள்ள படங்களை விட ஜெய்யின் வித்தியாசமான நடிப்பை இந்த படத்தில் பார்க்க முடியும் என்பதை சமீபத்தில் வெளியான டீசர் உறுதி செய்தது. 'சிவ சிவா' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் கிராமத்தில் நடக்கும் முக்கிய பிரச்சனை பற்றி சுசீந்திரன் பேசியுள்ளார். மேலும் இந்த படத்தின், பிஜிஎம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் ஜெய்க்கு ஜோடியாக மீனாட்சி கோவிந்தராஜன் மற்றும் ஆக்ஷனா சிங் ஆகியோர் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் பால சரவணன், காளி வெங்கட், ஹரீஷ் உத்தமன், ஜெயபிரகாஷ், சந்துரு, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை Lendi Studio சார்பாக எஸ்.ஐஸ்வர்யா தயாரித்துள்ளார். வேல் ராஜ் படத்தொகுப்பில் இப்படம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

click me!