அஜித் - சூர்யா போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு தெலுங்கில் டப்பிங் பேசியுள்ள சீனிவாச மூர்த்தி அதிர்ச்சி மரணம்!

Published : Jan 27, 2023, 08:41 PM IST
அஜித் - சூர்யா போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு தெலுங்கில் டப்பிங் பேசியுள்ள சீனிவாச மூர்த்தி அதிர்ச்சி மரணம்!

சுருக்கம்

பல முன்னணி நடிகர்களுக்கு தெலுங்கில் டப்பிங் பேசியுள்ள, டப்பிங் கலைஞர் சீனிவாச மூர்த்தி மாரடைப்பால் மரணமடைந்ததாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல டப்பிங் கலைஞர் மற்றும் டப்பிங் கலைஞர்  சங்கத்தின் பொருளாளருமான சீனிவாச மூர்த்தி இன்று காலை திடீர் என ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இவருக்கு வயது 50.

சீனிவாச மூர்த்தி, அஜித், சூர்யா, மோகன் லால், விக்ரம், ஷாருக்கான் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு தெலுங்கில் டப்பிங் பேசியுள்ளார்.  தமிழிலும் ஏராளமான படங்களுக்கு டப்பிங் பேசியுள்ளார். சென்னை, வளசரவாக்கம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த இவர், திடீர் என ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளது டப்பிங் கலைஞர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவரது உடல் தற்போது அவரது இல்லத்தில், அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், நாளை காலை 11 மணிக்கு இறுதி ஊர்வலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சீனிவாச மூர்த்தியின் மறைவுக்கு டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஜனனியின் புது பிசினஸுக்கு வந்த சிக்கல்... குடைச்சல் கொடுக்க ரெடியான ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது
ரம்யா கிருஷ்ணனை அசிங்கப்படுத்திய சத்யராஜ் மகள்..! தரையில் இறங்கி அடிப்பவர் தான் உண்மையான தலைவர் என பேச்சு