
தமிழ் நாவலாசிரியரும், ஞானபீட விருது பெற்றவருமான மறைந்த ஜெயகாந்தனின் வாரிசுகள், சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற தலைப்பை மாற்றுமாறு நடிகர் கமலஹாசனுக்கு பகிரங்கமாக கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுதொடர்பாக ஜெயகாந்தனனின் வாரிசுகள்,ஜே. காதம்பரி, ஜே. ஜெயசிம்மன் மற்றும் ஜே.தீபலட்சுமி ஆகியோர் கமல்ஹாசனுக்கு எழுதியுள்ள கடிதத்தில், சில நேரங்களில் சில மனிதர்கள் தங்கள் தந்தையின் இலக்கியப் படைப்பாகும், 1972 இல் சாகித்ய அகாடமி விருதைப் பெற்றுத்தந்தது.1970களில் இந்தக் கதை அதே பெயரில் தமிழ் திரைப்படமாக எடுக்கப்பட்டது. ஜெயகாந்தன் எப்போதுமே "திருட்டுத்தனத்தை வெளிப்படுத்தாதவர்.
அது அவரது மேதைமைக்கு கிடைத்த பாராட்டு என்று வாழ்ந்தவர். 2009 இல் கமல்ஹாசனின் உன்னை போல் ஒருவன், ஜெயகாந்தன் எழுதி, இணைந்து தயாரித்து, இயக்கிய 1965 ஆம் ஆண்டு தமிழ்த் திரைப்படமான உன்னைப்போல் ஒருவன் அசல் படத்தின் டிஜிட்டல் தடத்தை கிட்டத்தட்ட அழித்துவிட்டது என்று குற்றம்சாட்டியுள்ளனர். எனவே "சில நேரங்களில் சில மனிதர்களுக்கு இதே நிலை ஏற்படுவதை நாங்கள் நிச்சயமாக விரும்பவில்லை" என்று அந்தக் கடிதத்தில் கூறியுள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.