ஹீரோவாக அறிமுகமாகும் விஜய் மகன்... முதல் படத்திலேயே இவ்வளவு சம்பளமா?

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jun 10, 2020, 06:25 PM IST
ஹீரோவாக அறிமுகமாகும் விஜய் மகன்... முதல் படத்திலேயே இவ்வளவு சம்பளமா?

சுருக்கம்

அதற்கு பதிலாக விஜய் சேதுபதியின் திரைப்பயணத்தில் முக்கிய இடம் பிடித்த இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 2009ம் ஆண்டு விஜய்யின் வேட்டைக்காரன் படத்தில் இடம் பெற்ற ஓபனிங் பாடலான நான் அடிச்சா தாங்க மாட்ட பாடலுக்கு தந்தை விஜய்யுடன் சேர்ந்து நடனமாடினார் ஜேசன் சஞ்சய். அதன்பிறகு படங்களில் நடிக்கவில்லை. இந்நிலையில், தனது பள்ளிப்படிப்பை முடித்த சஞ்சய் தனது அப்பாவைப் போலவே சினிமா துறையை தேர்வு செய்து ஃபிலிம் மேக்கிங் தொடர்பாக வெளிநாட்டில் படித்து வருகிறார். அதனை முடிந்ததும் அப்பா விஜய்யைப் போலவே, இந்தியா வந்ததும் ஜோசன் சஞ்சய் திரைப்படங்களில் நடிக்க உள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதையும் படிங்க:  என்ன கொடுமை சார் இதெல்லாம்... வைரலாகும் “அன்றே கணித்த சூர்யா” மீம்ஸ்... ஸ்பெஷல் தொகுப்பு...!

தெலுங்கில் புச்சி பாபு சனா இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமும், ரங்கஸ்தலம் பட இயக்குநர் சுகுமாரும் இணைந்து தயாரித்து வரும் இந்த படத்தில், நடிகர் சிரஞ்சீவியின் சகோதரி மகனான வைஷ்ணவ் தேஜ் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி ராயாணம் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

இதையும் படிங்க: கேரளா ஸ்டைல் வேட்டி, சட்டையில் அமலா பால்... கெத்து போஸைப் பார்த்து திக்குமுக்காடும் ரசிகர்கள்...!

இந்த படத்தின் கதையை 'மாஸ்டர்' படப்பிடிப்பின் போது விஜய்யிடம் கூற, இந்த கதை தன்னுடைய மகனுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என விஜய் கூறியதாகவும், இதை கேட்ட விஜய் சேதுபதி உங்கள் மகன் இந்த படத்தில் நடிக்கிறார் என்றால்  நானே தயாரிக்கிறேன் என கூறியதாகவும் ஒரு தகவல்கள் வெளியாகின. இதையடுத்து உப்பெனா படத்தின் தமிழ் ரீமேக்கில் ஜேசன் சஞ்சய் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியானதை கேள்விப்பட்ட விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். 

இதையும் படிங்க: “இந்த இரண்டை மட்டும் செய்தால் போதும்”... குஷ்புவின் ஸ்லிம் லுக் ரகசியம்...!

தற்போது ஜேசன் சஞ்சய் அந்த படத்தில் நடிக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு பதிலாக விஜய் சேதுபதியின் திரைப்பயணத்தில் முக்கிய இடம் பிடித்த இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா  படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.மேலும் இந்த படத்தையும் முதல் பாகத்தை இயக்கிய கோகுல் எழுதி இயக்குகிறார். சித்தார்த் விபின் இசையமைக்கிறார் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த படத்தில் நடிப்பதற்காக சஞ்சய்க்கு 7 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் தளபதி விஜய்யோ, வெளியாகி வெற்றி பெற்ற பிறகு சம்பளத்தை பற்றியெல்லாம் பேசிக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டாராம். 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கடையில் காசு பணத்தை ஆட்டைய போட்டாரு இவரு: மாமனாரை பற்றிய உண்மையை சொன்ன சரவணன்!
சீரியல் நடிகை தற்கொலைக்கான காரணம் என்ன? பின்னணியில் திடுக்கிடும் தகவல்!