மோசமான நிலையில் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன்! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

By manimegalai aFirst Published Mar 12, 2021, 9:41 AM IST
Highlights

பிரபல முன்னணி இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் மூளைச்சாவு அடைந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.
 

பிரபல முன்னணி இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் மூளைச்சாவு அடைந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.

கடந்த 2003ஆம் ஆண்டு வெளியாகி, தேசிய விருது பெற்ற 'இயற்கை' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.பி.ஜெகநாதன். இந்த படத்தை தொடர்ந்து, நடிகர் ஜீவா, நயன்தாரா, நடித்த 'ஈ',  ஜெயம் ரவி நடித்த பேராண்மை போன்ற படங்களை இயக்கினார்.

தன்னுடைய திரைப்படங்கள் மூலம், புரட்சிகரமான கருத்துக்களை முன் வைப்பவர் இயக்குனர் ஜெகநாதன். இவர் தற்போது நடிகர் விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதிஹாசன் நடித்து முடித்துள்ள 'லாபம்' திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் லாபம் படத்தின் வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், மார்ச் 11ஆம் தேதி மாலை 3 மணியளவில் வீட்டிற்கு சாப்பிடுவதற்காக சென்ற எஸ்பி ஜெகநாதன் வெகுநேரமாகியும் அலுவலகத்திற்கு வராததால், செல்போன் அழைப்பை எடுக்காததால், உதவி இயக்குனர்கள் அவரை அவருடைய வீட்டிற்கு தேடிச் சென்றுள்ளனர். அங்கு வீட்டின் மெயின் கேட் திறந்து இருந்ததால் உள்ளே சென்று பார்த்த பொது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

இயக்குனர் எஸ்.பி.ஜெகநாதன் மூச்சு பேச்சில்லாமல் கீழே விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ந்த அவர்கள், உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைத்து கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவரை கொண்டு போய் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக கூறப்படும் நிலையில் இவர் மூளைச்சாவு அடைந்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

click me!