சொல்லாமலே, பூ, ரோஜாக்கூட்டம், பிச்சைக்காரன் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவிற்கு தந்து, தனித்துவமான இயக்குனர் என பெயர் பெற்றவர் இயக்குனர் சசி. இவருடைய தந்தை நாராயண சாமி இன்று காலை உயிர் இழந்தார்.
90 வயதாகும் இவருடைய தந்தை கடந்த சில வருடங்களாக வயது மூப்பு காரணமாக அவதிப் பட்டு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் இன்று காலை இவர் மரணமடைந்தார்.
இவருடைய மரணம் குறித்து அறிந்த பிரபலங்கள் பலர் இவருக்கு தங்களுடைய இரங்கலைத் தொடர்ந்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.