இதனிடையே ஷா நவாஸ் இறந்துவிட்டதாக வெளியாகும் செய்திகளை அவரது நண்பர்களும், குடும்பத்தினரும் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மலையாள திரையுலகில் எடிட்டாராக இருந்து இயக்குநராக அவதாரம் எடுத்தவர் ஷா நவாஸ். கேரள மாநிலத்தைச் சேர்ந்த நாரணிபுழா ஷாநவாஸ் இயக்கிய கரி திரைப்படம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. சாதிய பாகுபாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 2015ம் ஆண்டுக்கான தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
இதையும் படிங்க: இனி முல்லையாக நடிக்கப்போவது இவர் தான்... முதன் முறையாக ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியான புகைப்படங்கள்...!
மலையாளத்தில் முதன் முறையாக ஓடிடியில் வெளியான திரைப்படம் ‘சூஃபியும் சுஜாதாயும்’. கடந்த ஜூலை மாதம் வெளியான இந்த திரைப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. ஜெயசூர்யா, அதிதி ராவ் ஹைதாரி, தேவ் மோகன், சித்திக் உட்பட பலர் நடித்திருந்த இந்த படத்தை நரனிபுழா ஷாநவாஸ் என்பவர் இயக்கியிருந்தார். சமீபத்தில் தனது அடுத்த பட கதைக்காக ஷாநவாஸ் அட்டப்பாடி வந்துள்ளார். அங்கு அவருக்கு கடந்த சனிக்கிழமை நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து கோவையில் உள்ள கே.ஜி. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: விஜய் தலைக்கு மேல் தொங்கும் கத்தி... இறுதி அறிக்கை தயாரிப்பில் வருமான வரித்துறை தீவிரம்...!
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாசக் கருவிகளுடன் ஷாநவாஸுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் மருத்துவர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்தும் ஷா நவாஸ் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து உயிர் காக்கும் மருத்துவக்கருவிகளுடன் ஆம்புலன்ஸ் மூலமாக ஷா நவாஸை கோவையில் இருந்து கொச்சிக்கு உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு மாற்ற உள்ளதாக அவரது நெருங்கிய நண்பர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதனிடையே ஷா நவாஸ் இறந்துவிட்டதாக வெளியாகும் செய்திகளை அவரது நண்பர்களும், குடும்பத்தினரும் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.