
அஜித் எப்போதும் நல்லதை செய்தார் தான் பல இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் கூறி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் ஒரு இயக்குனர் தனக்கு நஷ்டம் ஏற்பட காரணம் அஜித் என கூறியுள்ளார்.
சமீபத்தில் நடந்த விழித்திரு படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட இயக்குனர் மீரா கதிரவன் பேசுகையில் ‘விதார்த் இந்த படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போது அஜித் சார் என்னிடம் ஒரு நாள் பேசினார்.
விதார்த் வீரம் படத்தில் நடிக்கவேண்டும், உங்கள் கால்ஷிட் கொஞ்சம் இடிக்கின்றது என கூற, அதற்கு ஏற்றார் போல் நான் அவருடைய கால்ஷிட்டை மாற்றினேன்.
இதனால், 6 மாதம் படப்பிடிப்பே நின்றது, ஆனால், அவர் இன்று ப்ரோமோஷனுக்கு கூட வரவில்லை’ என கோபமாக பேசினார்.
ஏன் ஒரு சிறு தயாரிப்பாளர் படம் 6 மாதம் நின்றதால் எவ்வளவு பணம் நஷ்டம் ஆகும் என அஜித்திற்கு தெரியுமே, என்றார் அங்கு இருந்த பலரும் அஜித் இப்படி செய்தாரா என்கிற வியாப்பிலேயே இருந்தனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.