இந்த இருவரும் சரிப்பட்டு வரமாட்டாங்க..... இதுக்கு இவர் தான்  சரி..... அதிரடி முடிவெடுத்த பாலா....!!!

First Published Nov 6, 2016, 6:13 AM IST
Highlights


பாலாவின்  கண் பார்வை பட்டு நடிப்பில் ஒளி வீச தொடங்கியவர்கள்   சூர்யா, விக்ரம், ஆர்யா, விஷால், அதர்வா முதற்கொண்ட பலர் உள்ளனர்.

இவர் நடிகர்களுக்கு மட்டும் இல்லாமல் பல எழுத்தாளர்களையும் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் அதில் பிரபலமான எழுத்தாளர்கள்  ஜெயமோகனும், ராமகிருஷ்ணனும்  ஆவர்.

இவர்கள்  இலக்கிய உலகில் கொடிகட்டி பறந்தாலும், சினிமாவுக்கு வந்து புகழ் வெளிச்சம் பட்டது இயக்குனர் பாலாவினால். சண்டைகோழிக்கு வசனம் ராமகிருஷ்ணன். எழுதி இருந்தாலும், பாலாவுக்கு எழுதிய பின் தன் பிரபலமானார்.

தற்போது, பாலா  சாட்டை யுவன், ஏர்டெல் சூப்பர் சிங்கர் பிரகதியை வைத்து படம் இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் வசனம் எழுதுவதற்கு ஜெயமோகனும் வேண்டாம்,  ராமகிருஷ்ணனும் வேண்டாம் என்று முடிவு செய்து, ரமணகிரிவாசன் என்பவரை வசனம் எழுத வைக்க அதிரடி முடிவு எடுத்துள்ளாராம் பாலா....!!!
 

click me!