
'பகீசா' என்கிற படம் மூலம் மிகவும் பிரபலமானவர் பழம்பெரும் நடிகை கீதா கபூர், இவருக்கு வயது 57 . இந்நிலையில் இவருடைய மகனே இவரை அடித்து கொடுமை செய்து மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
நாளைடைவில் இவருடைய மகன் திரும்பவும், மருத்துவமனைக்கு வந்து அவருடைய தாயை கடந்த இரண்டு மாதமாக அழைத்து செல்லவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த தகவலை அறிந்த தனியார் தொலைக்காட்சி ஒன்று இவருடைய பேட்டியை ஒளிபரப்பியது. தொடர்ந்து போலீசாரும் இவருடைய மகனை தேடும் வேளையில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது கீதா கபூரின் நிலையை அறிந்த பிரபல இயக்குனர் அசோக் பண்டிட் இவருடைய மருத்துவ செலவிற்கான அனைத்து தொகையையும் மருத்துவமனையில் செலுத்தி விட்டு, கீதா கபூரை முதியோர் இல்லத்தில் சேர்த்துள்ளார் இந்த விஷயத்தை அசோக் பண்டித் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.