தனுஷ் கேரவனுக்காக அனுமதியின்றி மின்சாரம் எடுத்ததால் ரூ.15 ஆயிரம் அபராதம்; மின்வாரியம் அதிரடி…

 
Published : Aug 05, 2017, 11:12 AM ISTUpdated : Sep 19, 2018, 12:58 AM IST
தனுஷ் கேரவனுக்காக அனுமதியின்றி மின்சாரம் எடுத்ததால் ரூ.15 ஆயிரம் அபராதம்; மின்வாரியம் அதிரடி…

சுருக்கம்

Dhanush has been fined for illegal Electric power action ...

தனுஷ் கேரவனுக்காக அனுமதியின்றி மின்சாரம் எடுத்ததால் கேரவனின் உரிமையாளருக்கு ரூ.15 ஆயிரத்து 731-ஐ அபராதமாக மின்வாரியம் விதித்துள்ளது.

சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள விஐபி - 2 படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிக்காக பல இடங்களுக்குச் சென்றுவந்த தனுஷ் தற்போது ஓய்விற்காக தனது சொந்த ஊரான தேனிக்குச் சென்றுள்ளார்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகிலுள்ள முத்துரெங்காபுரம் கிராமத்தில் கஸ்தூரி அங்கம்மாள் என்ற கோவில் உள்ளது. குலதெய்வ கோவில் என்பதால் நேற்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு தனுஷ், அவரது மனைவி ஐஸ்வர்யா, இயக்குனரும் தந்தையுமான கஸ்தூரி ராஜா மற்றும் தாய் விஜயலட்சுமி ஆகியோருடன் முத்துரெங்காபுரம் கிராமத்திற்குச் சென்றனர்.

அவர்களின் வருகையை முன்னிட்டு அந்த கிராமத்தில் முன்கூட்டியே அவர்களுக்காக கேரவன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த கேரவனுக்காக நேற்று காலை 8 மணி முதல் பிறபகல் 3 மணிவரை அனுமதியின்றி மின்சாரம் எடுத்துள்ளனர்.

இது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளுக்கு புகார் கொடுக்கப்பட்டதையடுத்து, அந்த கிராமத்திற்குச் சென்ற மின்வாரிய அதிகாரிகள் கேரவனின் ஓட்டுநர் மற்றும் தனுஷிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது கேரவனுக்கு அனுமதியின்றி மின்சாரம் எடுக்கப்பட்டது உறுதியானது. இதன் காரணமாக மின்வாரிய அதிகாரிகள் கேரவன் உரிமையாளருக்கு ரூ.15 ஆயிரத்து 731 அபராதம் விதித்தனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!