மாரடைப்பால் சிகிச்சை பெரும் விவேக்..! துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் உருக்கமான பதிவு!

By manimegalai aFirst Published Apr 16, 2021, 1:56 PM IST
Highlights

மாரடைப்பு காரணமாகா, காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், நடிகர் விவேக் விரையில் நலம் பெற்று, வீடு திரும்ப வேண்டும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், ட்விட்டர்  மூலம் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
 

மாரடைப்பு காரணமாகா, காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், நடிகர் விவேக் விரையில் நலம் பெற்று, வீடு திரும்ப வேண்டும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், ட்விட்டர்  மூலம் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

காமெடியில் கூட, சமூக கருத்துக்களை புகுத்தி அனைவரையும் சிரிக்க வைப்பவர், நடிகர் விவேக். மேலும் ரசிகர்களால் சின்ன கலைவாணர் என அன்புடன் அழைக்கப்பட்டு வருகிறார். சினிமாவை தாண்டி, அப்துல் கலாமின் மரம் நடும் சமூக சேவையை தொடர்ந்து செய்து வருகிறார். இந்நிலையில் இவர் தன்னுடைய குடும்பத்தினருடன் அமர்ந்து, பேசி கொண்டிருந்த போது, திடீர் என மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து உடனடியாக அவரது குடும்பத்தினர், சென்னை வடபழனியில் உள்ள பிரபல  தனியார்  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரை அனுமதினர்.

மேலும் செய்தி தொடர்பாளர் நிகில் முருகன், நடிகர் விவேக் உடல் நிலை சீராக உள்ளதாகவும், ரசிகர்கள் பயம் கொள்ள வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளம் மூலம் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர், தொடர்ந்து விவேக் விரைவில் உடல் நலம் பெற்று வர வேண்டும் என தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில்... துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ட்விட்டர் மூலம் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது... மாரடைப்பு காரணமாக இன்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அன்புச் சகோதரர் நடிகர் திரு.விவேக்  அவர்கள் விரைவில் பூரண நலம்பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். என தெரிவித்துள்ளார்.
 

click me!