
இந்தி திரையுலகின் முன்னணி நடிகையான தீபிகா படுகோன் மற்றும் நடிகர் ரன்வீர் சிங் நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர். இருவரும் விழாக்களுக்கு ஒன்றாக வருவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
பத்மாவத் படத்துக்குப் பின்னர் அவர்களுடைய நெருக்கம் அதிகமாகிவிட்டது என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையே இவ்வாண்டு இறுதிக்கு இருவரும் திருமணம் செய்துக்கொள்ளலாம் எனவும் தகவல்கள் வெளியாகியது. இருவீட்டாரும் திருமண வேலைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியது.
இப்போது இருவர் தரப்பிலும் அதிகாரப்பூர்வமான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. தீபிகா படுகோனே, ரன்வீர் சிங் திருமணம் நவம்பரில் நடக்கிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபிகா படுகோன், ரன்வீர் சிங்கை திருமணம் செய்துகொள்ளும் தேதியை தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
திருமண அழைப்பிதழ் வடிவில் அவர் வெளியிட்டுள்ள தகவலில் ‘எங்கள் குடும்பாத்தாரின் ஆசிகளுடன் எங்கள் திருமணம் நவம்பர் 14,15 தேதிகளில் நடைபெறும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
இத்தனை காலமாக எங்கள்மீது நீங்கள் தொடர்ந்து காட்டிவரும் அன்புக்கு நன்றி தெரிவிப்பதுடன், இந்த வாழ்க்கை தொடங்கப்போகும் எங்களை ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்’ என கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.