பெரிய மார்பகங்கள் இருந்தால்தான் சினிமாவில் சான்ஸ் கிடைக்குமா ? அதிர்ச்சி தகவலை வெளியிட்ட  பிரபல நாயகி !!

First Published Jun 30, 2018, 8:33 AM IST
Highlights
Deepika padukone speake about cinema industry


சினிமாவில் நடிப்பதற்காக நடிகைகள் எந்த சமரசமும் செய்து கொள்ளக் கூடாது என பத்மாவத் பட நாயகி தீபிகா படுகோனே தெரிவித்துள்ளார்.

பத்மாவத்  திரைப்படம் படம்  பாலிவுட் நடிகை தீபிகா படுகோனை வேறு தளத்திற்கு கொண்டு சென்றுள்ளது. பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு தான் இந்தப் படம் வெளியானது. தீபிகாவுக்கும் இந்தப்படத்தில் நடித்ததற்காக பல்வேறு மிரட்டல்கள் விடுக்கப்பட்டது. தடைகளை கடந்து இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

மிரட்டல்களுக்கெல்லாம் அஞ்சாத தீபிகா தொடர்நது அது போன்ற இந்திப் படங்களில் நடித்து வருகிறார்.  இந்நிலையில் தீபிகா  தனது  ஆரம்ப காலம் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை என ஒரு ஆங்கில பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேலும் பெரிய மார்பகங்கள் இருந்தால் தான் பாலிவுட் தயாரிப்பாளர்களையும், இயக்குநர்களையும் ஈர்க்க முடியும். அதனால் மார்பகங்களை செயற்கையாக பெரிதாக்கிக்கொள்ள சிலர் ஆலோசனைகள் வழங்கினர், ஆனால் எனக்கு அதில் நம்பிக்கை இல்லை என தெரிவித்துள்ளார்.

படவாய்ப்புகளுக்காக நான்  யாரிடமும், அட்ஜஸ்ட் செய்யப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார், உலகம் முழுவதும் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதை Me Too  என்ற ஆப் மூலம் அம்பலப்படுத்தி வரும் நிலையில் நடிகை தீபிகா படுகோன் திரையுலகில் தான் அறிமுகம் ஆனபோது எப்படி எல்ம் அவமானப்படுத்தப் பட்டார் என்பது குறித்தும் அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

click me!