தமிழ்சினிமா பி.ஆர்.ஓ.க்களே உங்களை எச்சரிக்கிறேன்... நடிகர் சித்தார்த்தின் விவகாரமான ட்வீட்!

By vinoth kumarFirst Published Oct 22, 2018, 3:15 PM IST
Highlights

MeToo கோஷ்டிகளின் கோபப்பார்வை சமீப தினங்களாக மீடியாவின் பக்கம் திரும்ப ஆரம்பித்திருக்கிறது. லீனா,லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் கோஷ்டிகள் நேரடியாகவே பத்திரிகை நிருபர்களின் பெயரைக் குறிப்பிட்டு தங்கள் முகநூல் பக்கங்களிலும், ட்விட்டர் பக்கங்களிலும் கிழித்துத் தொங்கவிட்டுக் கொண்டிருக்க, இப்பிரச்சினையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியிருக்கிறார் நடிகர் சித்தார்த்.

MeToo கோஷ்டிகளின் கோபப்பார்வை சமீப தினங்களாக மீடியாவின் பக்கம் திரும்ப ஆரம்பித்திருக்கிறது. லீனா,லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் கோஷ்டிகள் நேரடியாகவே பத்திரிகை நிருபர்களின் பெயரைக் குறிப்பிட்டு தங்கள் முகநூல் பக்கங்களிலும், ட்விட்டர் பக்கங்களிலும் கிழித்துத்தொங்கவிட்டுக்கொண்டிருக்க, இப்பிரச்சினையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியிருக்கிறார் நடிகர் சித்தார்த். 

சின்னச்சின்ன துண்டு துக்கடா கேரக்டர்களில் நடித்துக்கொண்டு, பார்ட் டைம் பத்திரிகையாளராகவும் இயங்கிவரும் பயில்வான் ரங்கநாதன் எப்போதுமே பத்திரிகையாளர் சந்திப்புகளில் நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குநர்களிடம் மிக அநாகரிகமான முறையில் கேள்விகள் கேட்டுவருகிறார் என்கிற புகார் நீண்ட நெடுங்காலமாகவே உண்டு. சமீபத்திய பிரஸ்மீட் அனைத்திலுமே இவர் கேட்ட கேள்விகள் அனைத்தும் ‘மி டு’ வால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எதிரானவை. 

இவரது சமீப நடவடிக்கைகளால் பலரும் மனக்கொந்தளிப்புக்கு ஆளாகியிருந்த நிலையில், நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘டியர் தமிழ்சினிமா பி.ஆர். ஓ. க்களே இந்த பயில்வான் ரங்கநாதன் என்பவர் தொடர்ந்து தமிழ்சினிமாவுக்கும், எங்கள் சினிமா  பெண்களுக்கும் எதிராக பேசிவருகிறார். அவர் ரொம்ப சீனியர் அதனால் பொறுத்துப்போங்கள் என்று சொன்னீர்கள். 

இந்த கோமாளியை இனியும் பொறுப்பதாக இல்லை. இனி இவரை பிரஸ்மீட்டுக்கு அழைத்தால், நானும் எனது படக்குழுவினரும் வெளிநடப்பு செய்வதைத் தவிர வேறுவழியில்லை’ என்று கொதித்திருக்கிறார். இச்செய்தியை லக்‌ஷமி ராமகிருஷ்ணன் உட்பட பலரும் ரீட்விட் செய்து, சித்தார்த் வழியில் நாங்களும் இருக்கிறோம் என்று பி.ஆ.ஓ.க்களை எச்சரிக்கிறார்கள்.

click me!