நடிகர் விஜய்யின் கோரிக்கையை நிராகரித்த முதல்வர்... தியேட்டர் உரிமையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய அறிவிப்பு!

By Kanimozhi PannerselvamFirst Published Dec 31, 2020, 6:58 PM IST
Highlights

இதனால் பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களை தமிழக அரசு அனுமதிக்கும் என அனைவரும் காத்திருந்தனர். இதனிடையே இன்று தமிழகத்தில் மீண்டும் ஜனவரி 31ம் தேதி வ

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் - விஜய்சேதுபதி நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 13ம் தேதி வெளியாக உள்ளது. மாஸ்டர் திரைப்படம் தியேட்டர்களில் தான் முதலில் ரிலீஸ் ஆகும் என தயாரிப்பாளர்கள் உறுதி அளித்திருந்த நிலையில், அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நடிகர் விஜய், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கடந்த 27ம் தேதி திடீரென சந்தித்தார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில்  இரவு 10 மணிக்கு மேல் ரகசிய சந்திப்பு நடைபெற்றது. அப்போது முதல்வரிடம் தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டுமென விஜய் கேட்டுக்கொண்டதாக கூறப்பட்டது. அதேபோல் தனது மாஸ்டர் படத்திற்காக வரவில்லை என்றும், ஒட்டுமொத்த திரையரங்கு உரிமையாளர்களின் நிலையை கருத்தில் கொண்டே தங்களை சந்தித்ததாகவும் முதல்வரிடம் விஜய் தெரிவித்ததாக கூறப்பட்டது. 

இதனால் பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களை தமிழக அரசு அனுமதிக்கும் என அனைவரும் காத்திருந்தனர். இதனிடையே இன்று தமிழகத்தில் மீண்டும் ஜனவரி 31ம் தேதி வரை ஊடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் நோய்த்தொற்றைத் தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், 31.12.2020 முடிய தமிழ்நாடு முழுவதும் தற்போதுள்ள பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளில் கீழ்க்கண்ட தளர்வுகளுடன், 31.1.2021 நள்ளிரவு 12 மணி வரை மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

அப்படி என்றால் இதற்கு முன்னதாக தியேட்டர்களுக்கு அறிவிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளின் படி 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்பது தெளிவாகிறது. எனவே தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முதலமைச்சர் நிராகரித்துவிட்டதாக தெரிகிறது. ஆனால் மற்றொரு தகவலின் படி பொங்கலுக்கு முன்னதாக தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிடும் என்றும் கூறப்படுகிறது. 
 

click me!