சூடாமணி வாங்கிய சத்தியம்.. உடைந்த ரகசியம், சண்முகம் எடுத்த முடிவு: அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

Published : Jul 09, 2025, 08:57 PM ISTUpdated : Jul 13, 2025, 06:52 PM IST
Anna serial

சுருக்கம்

shanmugam shocking decision Anna serial in Tamil : ஜீ 5 தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் அண்ணா சீரியலில் இன்றைய எபிசோடில் சண்முகம் எடுத்த அதிரடி முடிவு குறித்து பார்க்கலாம்.

shanmugam shocking decision Anna serial in Tamil :சரவணன் மீனாட்சிக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து செந்தில் அடுத்தடுத்து சீரியல்களில் பிஸியாக நடித்து வருகிறார். மாப்பிள்ளை, கல்யாணம் கண்டிஷன்ஸ் அப்ளை, நாம் இருவர் நமக்கு இருவர் என்று பல சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது ஜீ 5 தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் அண்ணா சீரியலில் நடித்து வருகிறார். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படும் இந்த சீரியலில் செந்தில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.

இவரைத் தொடர்ந்து நித்யா ராம், விஜே தாரா, ஹேமா சின்ராஜ், சுனிதா என்று ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர். ஆக்‌ஷன், டிராமா, ரொமான்ஸ் கலந்த கதையில் உருவாகி வரும் இந்த தொடரை இயக்குநர் துர்கா சரவணன் இயக்கி வருகிறார். கிட்டத்தட்ட 700க்கும் அதிகமான எபிசோடுகளை கடந்து அண்ணா சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பாக்கியம் வீராவுக்கு விபூதி வைக்க போக சூடாமணி தோன்றிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. பாக்கியம் கண்ணிற்கு சூடாமணியின் உருவம் தெரிந்தது. இதைத் தொடர்ந்து அவர் திருநீறு தட்டை கீழே தவற விட்டார். இதைத் தொடர்ந்து எல்லோரும் என்னாச்சு என்னாச்சு பதறிப் போய் கேட்டனர். பின்னர் பிளாஷ்பேக் காட்சி ஒளிபரப்பாகிறது.

அதில், சவுந்தரபாண்டி செய்த குற்றத்திற்கு சூடாமணிக்கு ஜெயிலில் இருந்த விஷயம் அறிந்து பாக்கியம் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தார். அப்போது அவரை சூடாமணி காப்பாற்றுகிறார். அதன் பிறகு தான் 18 வருஷம் ஜெயிலில் கஷ்டப்பட்டதை சொல்லி சிவபாலனுக்கு வீராவை கட்டி வைக்க சம்மதம் கேட்க, அதற்கு பாக்கியமும் சம்மதம் தெரிவித்துவிட்டார்.

இது குறித்து பரணி சண்முகத்திற்கு தெரிந்தால் கூட அவரும் ஒன்று சொல்லமாட்டான் என்ற தைரியத்தில் பாக்கியத்தை வீட்டிற்கு அழைத்து வருகிறார். சண்முகமும் ஒன்று சொல்லவில்லை. இதற்கு காரணம், அவரது அம்மா சொன்ன பிறகு நான் எப்படி மறுப்பு சொல்ல முடியும் என்று சொல்லிவிட்டார். கடைசியாக வீரா மற்றும் சிவபாலன் திருமணம் முடிவு செய்யப்பட்டது. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது பற்றி பார்க்கலாம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

கார்த்திக் மற்றும் ரேவதி எப்போது ஒன்று சேர்வார்களா? கார்த்திகை தீபம் 2 சீரியல் அப்டேட்!
மாட்டிக்கிட்டோம் என்று தெரிந்து நாடகமாடிய தங்கமயில்- பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!