
கடந்த டிசம்பர் 5ஆம் தேதி தான் மிக்ஜாம் புயல் கரையை கடந்தது என்றாலும் கூட, கடந்த டிசம்பர் 4ம் தேதியே சென்னையில் மழை குறைய தொடங்கியது. இதனை அடுத்து சென்னையில் பல பகுதிகளில் வெள்ள நீர் வடிந்து விட்டாலும் கூட, தாழ்வான பல பகுதிகளில் இன்றளவும் இடுப்பளவு நீரில் தான் மக்கள் தத்தளித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாகவே தன்னார்வலர்கள் பலர் களமிறங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வரும் நிலையில் சில தினங்களுக்கு முன்பு நடிகர் சூர்யா மற்றும் அவரது தம்பி நடிகர் கார்த்தி உள்ளிட்டோர் 10 லட்சம் ரூபாயை வெள்ள நிவாரண நிதிக்காக கொடுத்தார். அவரைத் தொடர்ந்து பல நடிகர், நடிகைகள் தங்களால் இயன்ற பணத்தை தற்பொழுது வெள்ள நிவாரணத்திற்கு கொடுத்து வருகின்றனர்.
தளபதி விஜய் அவர்களும், உதவி தேவைப்படும் மக்களுக்கு உதவ தனது விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளை ஊக்குவித்துள்ளார். நடிகர்கள் தர்ஷன், ஹரிஷ் கல்யாண் உள்ளிட்ட பலரும் மக்களுக்கு உதவிகளை செய்து வரும் நிலையில், சின்னத்திரை நடிகர் பாலா அவர்கள் சுமார் 100 குடும்பங்களுக்கு பணமும் பொருள் உதவியும் அளித்துள்ளது வெகுவாக பலர் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இந்த சூழலில் நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் பலர் கடந்த நான்கு நாட்களாக ஓய்வு உறக்கமின்றி வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களுக்கு நேரில் சென்று உணவுகளும் தண்ணீர் பாட்டில்களும் வழங்கி வருகின்றனர். தங்களை திரையில் கொண்டாடும் ரசிகர்களுக்கு, இது நடிகர்கள் செய்யும் ஒரு வகை கைமாறு என்றே கூறலாம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.