பிக்பாஸ் விக்ரமன் மீது பாலியல் வன்கொடுமை புகார் கூறிய பெண்... 13 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு

Published : Oct 29, 2023, 02:31 PM IST
பிக்பாஸ் விக்ரமன் மீது பாலியல் வன்கொடுமை புகார் கூறிய பெண்... 13 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு

சுருக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான விக்ரமன் மீது வடபழனி மகளிர் காவல்நிலைய போலீசார் 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விசிக கட்சி நிர்வாகியாக பணியாற்றி வரும் விக்ரமன், கடந்தாண்டு நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சியில் பைனல் வரை முன்னேறிய விக்ரமன் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டார். அசீம் முதலிடம் பிடித்த நிலையில் விக்ரமனுக்கு இரண்டாம் இடமே கிடைத்தது. ஆனால் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது அசீமும், விக்ரமனும் எலியும் பூனையுமாக சண்டையிட்டுக்கொண்டது அந்த சீசனை மேலும் விறுவிறுப்பாக்கியது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தொடர்ந்து அரசியல் பணிகளை மேற்கொண்டு வரும் விக்ரமன் மீது கடந்த ஜூலை மாதம் புகார் ஒன்று முன்வைக்கப்பட்டது. கிருபா முனுசாமி என்பவர் விக்ரமன் மீது கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த அந்த புகாரில், விக்ரமன் தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாகவும், காதலிக்கும் போது தன்னிடம் இருந்து ரூ.13.7 லட்சம் பணம் வாங்கியதாகவும், அதில் 12 லட்சத்தை திருப்பி கொடுத்துவிட்டு 1.7 லட்சத்தை தரவில்லை என்றும் கூறி இருந்தார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அதுமட்டுமின்றி, இதுதொடர்பாக அவர் பதவி வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் புகார் அளித்தும் அதன் மீது ஆக்‌ஷன் எடுக்கப்படாததால், இதன்மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கும்படி கிருபா அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் கிருபாவின் இந்த புகாரை விக்ரமன் திட்டவட்டமாக மறுத்ததோடு, இதை சட்டரீதியாக எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் எனக் கூறி இருந்தார்.

இதையடுத்து தான் அளித்த புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் நீதிமன்றத்தை நாடினார் கிருபா. பின்னர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி விக்ரமன் மீது சென்னை வடபழனியில் உள்ள மகளிர் காவல்நிலையத்தில் பாலியல் வன்கொடுமை, மோசடி உள்பட 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து விக்ரமனிடம் தொடர்ந்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

இதையும் படியுங்கள்... நீ விதைத்த வினையெல்லாம் உனை அறுக்க காத்திருக்கும்... காதல் மோசடியில் சிக்கிய விக்ரமனை சீண்டிய அசீம்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

லட்சங்களில் சம்பளம் வாங்கிய டான்சர் குயீன் ரம்யா, அழகு ராணி வியானா: ஒரு நாளைக்கு எத்தனை லட்சம்?
அடுத்தடுத்து நடையை கட்டிய போட்டியாளர்கள்: இந்த வாரத்தில் டபுள் எவிக்‌ஷன்: பிக் பாஸின் அதிரடி ட்விஸ்ட்!