நடிகை குஷ்பு வீட்டுக்கு வெடி குண்டு மிரட்டல்… தலாக் பிரச்சனை காரணமா என விசாரணை...

First Published May 6, 2017, 9:36 AM IST
Highlights
bomb threat to kushboo


சென்னை பட்டினபாக்கத்தில் உள்ள நடிகையும், காங்கிரஸ் கட்சியின், செய்தி தொடர்பாளருமான நடிகை குஷ்புவின் வீ்டடில் வெடிகுண்டு வைத்திருப்பதாக நள்ளிரவில் தேனாம்பேட்டை 108 ஆம்புலன்ஸ் சேவை மையத்திற்கு தொலைப்பேசி அழைப்பு வந்தது. இதையடுத்து குஷ்புவின் வீட்டிற்கு சென்று காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடிகை குஷ்பு சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து அவ்வப்போது சிக்கலில் மாட்டிக் கொள்வார். இவரது சர்ச்சைப் பேச்சால் தொடர்ந்து நீதி மன்றங்களுக்கும், காவல் நிலையத்துக்கும் அடிக்கடி சென்று வருவார்.

ஏற்கனவே ஒரு முறை திருச்சியில்திமுக மாநாடு நடைபெற்றபோது, ஸ்டாலின் குறித்து சர்ச்சை கருத்து வெளியிட்டதால் குஷ்புவின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இந்த சம்பவத்தை அடுத்து குஷ்பு திமுக வில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு தேனாம்பேட்டை 108 ஆம்புலன்ஸ் சேவை மையத்துக்கு மர்ம போன் ஒன்று வந்துள்ளது. அப்போது பேசிய மர்ம நபர், பட்டினப்பாக்கத்தில் உள்ள நடிகை குஷ்பு வீட்டில் வெடி குண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் குஷ்பு வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

குஷ்பு அண்மையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது ஆண்கள் மட்டும் தான் தலாக் சொல்ல முடியும், இன் பெண்களும் தலாக் சொல்லாம் என கருத்துத் தெரிவித்திருந்தார். குஷ்புவின் இந்த பேட்டியின் அடிப்படையில் அவருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!