
ஓவியாவுக்காக கடவுளால் அனுப்பப்பட்டவர் பிந்து மாதவி என்று நடிகை ஸ்ரீப்ரியா கூறியுள்ளார்.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் புதுசு புதுசா டாஸ்க் கொடுக்கப்பட்டு அதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசும் கொடுக்கப்படுகிறது.
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் யாருக்குமே பிடிக்காதவர்கள் யாரென்றால் அது ஜூலியும், காயத்ரியும் தான். இதில் பிக்பாஸ் குடும்பத்திற்குள் பிந்து மாதவி புதுசா வந்துள்ளார்.
இந்த நிலைய்ல் “பிந்து மாதவிக்கு காயத்ரி மற்றும் ஜூலியை பற்றி நன்கு தெரியும். அதனால் தான், அவரை நாமினேட் செய்துள்ளார். ஓவியாவிற்காக கடவுள் தான் பிந்து மாதவியை அனுப்பி வைத்துள்ளார்” என்று நடிகை ஸ்ரீபிரியா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், புதிதாக கூட்டணி வைத்துள்ள காயத்ரி, ஜூலி ரைசா! மூன்று தேவிகள் என்று கிண்டலடித்து உள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.