BiggBoss Raju : பிக்பாஸ் டைட்டில் மட்டும் தான் கொடுத்தாங்க... இன்னும் ரூ.50 லட்சம் தரல - ஓப்பனாக சொன்ன ராஜு

By Ganesh PerumalFirst Published Jan 21, 2022, 12:06 PM IST
Highlights

பிக்பாஸ் வெற்றிக்கு பின் பல்வேறு பேட்டிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் அனுபவங்கள் குறித்து பகிர்ந்துகொண்ட ராஜு, தற்போது சினிமாவில் நிறைய பட வாய்ப்புகள் வருவதாகவும் தெரிவித்தார்.

கனா காணும் காலங்கள் தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான ராஜு, இயக்குனர் நெல்சனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார். இதுதவிர விஜய் டிவி நிகழ்ச்சிகள் சிலவற்றுக்கு ஸ்கிரிப்ட் ரைட்டராகவும் பாணியாற்றி உள்ளார் ராஜு. கடைசியாக இவர் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் நடித்து வந்தார். அந்த சமயத்தில் தான் இவருக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது. 

இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபின் அவரது வாழ்க்கையே மாறிவிட்டது. மக்களின் மனங்களை வென்ற போட்டியாளராக இருந்ததோடு மட்டுமின்றி, இறுதிப்போட்டியில் அதிக வாக்குகளை பெற்று டைட்டில் வென்றும் அசத்தினார். 

பிக்பாஸ் டைட்டில் வின்னரான ராஜுவுக்கு பிக்பாஸ் லோகோவுடன் கூடிய டிராபியும், ரூ.50 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்பட்டது. பிக்பாஸ் டைட்டில் ஜெயித்த ராஜுவுக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் பாராட்டுக்களை தெரிவித்தனர். 

பிக்பாஸ் வெற்றிக்கு பின் பல்வேறு பேட்டிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் அனுபவங்கள் குறித்து பகிர்ந்துகொண்ட ராஜு, தற்போது சினிமாவில் நிறைய பட வாய்ப்புகள் வருவதாகவும் தெரிவித்தார். மேலும் ஒரு பேட்டியில், பிக்பாஸ் பைனல் முடிந்து டிராபி மட்டும் தான் தனது கைக்கு வந்ததாகவும், ரூ.50 லட்சம் இன்னும் தரவில்லை என்பதையும் ஓப்பனாக சொன்னார் ராஜு.

click me!