Bigg Boss Tamil5 : அப்பாடா ஒருவழியா பிக் பாஸ் வீட்டில் பூத்த காதல்...கடுப்பான பிரியங்கா!!

By Kanmani PFirst Published Dec 7, 2021, 1:45 PM IST
Highlights

Bigg Boss Tamil 5 : பிக் பாஸ் சீசனில் இந்த முறை தான் ரசிகர்களுக்கு போதுமான சுவாரஸ்யம் இல்லை என வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.  அந்த குறை ஒருவழியாக இன்று தீர்ந்துள்ளது.

பிக் பாஸ் சீசன் 5  சற்று விறுவிறுப்பு குறைவாகவே நடந்து வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இதுவரை நமீதா மாரிமுத்து, நாடியா சங், சின்ன பாப்பா, சுருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரி என பெண் போட்டியாளர்களே அதிகளவில் எலிமினேட் ஆகி உள்ளனர். இவர்களில் அபிஷேக் தான் முதல் முறை வெளியே அனுப்பப்பட்ட போட்டியாளர் இதன் பிறகு வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுத்த அபிஷேக் பழையபடி பிரியங்காவுடன் நட்பு பாராட்டியதோடு தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்த முழு முயற்சி செய்தார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

பின்னர் கடந்த வார ஏவிக்சனுக்கான நாமினேட்டில் அபிஷேக்கின் பெயரும் இடம்பிடித்திருந்தது. இதன் காரணமாக தனது கடின உழைப்பை பிக் பாஸ் வீட்டில் வெளிப்படுத்தினார் அபிஷேக். ஆனாலும் மக்களின் பார்வை அபிஷேக் மீது படவில்லை என்றே தோன்றுகிறது.

கடந்த வாரம் கடைசி மூன்று இடத்தில் அபிஷேக் ராஜா, வருண் மற்றும் அபிநய் இருந்தனர். அதில் எவிக்‌ஷனை அறிவிக்கவும் இந்த முறை பிரேக்கிங் நியூஸ் ஃபார்மட்டையே கமல் பயன்படுத்தினார். அபிஷேக் ராஜா தான் இந்த வாரமும் வெளியேறினார். இதன் மூலம் பிக் பாஸ் சீசனில் இதுவரை வெளியேறிய ஒரே ஆண் போட்டியாளர் அபிஷேக் தான்.

இந்நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் மெத்தை மீது பாவனி, பிரியங்கா, அமீர் உள்ளிட்டோர் கட்டிலில் அமர்ந்திருக்கின்றனர். அப்போது அமீர் ஏன் அன்னை பார்த்து வெட்கப்படுகிறீர்கள் என கேட்க பாவனி நான் உங்கள் ரசிகை என கூறுகிறார். இதை பார்த்த பிரியங்கா இருவருக்கும் ஒருவர் மீது ஒருவருக்கு கிரஸ் உள்ளதா என கேட்க இருவரும் வெட்கப்பட பிரியங்கா தனது தலையில் அடித்துக்கொள்கிறார்.

 

click me!