
இந்நிலையில் 17 வது போட்டியாளராக மாடல் அழகி அனன்யா ராவ் களமிறங்க, 18 வது போட்டியாளராக விஜய் என்பவர் களமிறங்கி உள்ளார். இதற்கு இடையில் 16 வது போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளார் பிரபல எழுத்தாளரும் நடிகருமான பாவா செல்லதுரை.
யார் இந்த பாவா செல்லதுரை?
சென்னையை அடுத்த திருவண்ணாமலையில் கடந்த 1962 ஆம் ஆண்டு பிறந்தவர் தான் பாவா செல்லதுரை. கடந்த 2015 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பூலோகம் திரைப்படத்தில் ப்ரொபசர் சந்திரசேகரராக நடித்திருந்தார் பாவா செல்லதுரை.
அதன் பிறகு ஜோக்கர், விஜய் சேதுபதியின் சீதக்காதி, பேரன்பு, சைக்கோ உள்ளிட்ட பல படங்களில் நல்ல பல கதாபாத்திரங்கள் ஏற்று நடித்த பாவா செல்லதுரை, சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஜெய் பீம் திரைப்படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நடிகராக மட்டுமல்லாமல், "எல்லா நாளும் கார்த்திகை", "டோமினிக்", "நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை", போன்ற ஏழுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி உள்ளார். திருவண்ணாமலை பகுதியில் மக்களுக்கு இடையூறாக நடக்கும் பல சமூக அநீதிகளை தட்டிக்கேட்ட சமூக ஆர்வலராகவும் பாபா செல்லதுரை திகழ்கிறார்.
இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் கையில் ஒரு புத்தகத்தோடு உள்ளே நுழைந்தது அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.