ஊசி இடம் கொடுத்தால் தான் நூல் நுழையும் பிரச்சனை பண்ணும் மது! பதில் சொல்ல முடியாமல் ஓட்டம் பிடித்த லாஸ்லியா!

Published : Aug 17, 2019, 04:03 PM IST
ஊசி இடம் கொடுத்தால் தான் நூல் நுழையும் பிரச்சனை பண்ணும் மது! பதில் சொல்ல முடியாமல் ஓட்டம் பிடித்த லாஸ்லியா!

சுருக்கம்

பிக்பாஸ் வீட்டில் நேற்று நடந்த பிரச்சனைகளை பார்த்து, ரசிகர்களே ஆட்டம் கண்டு விட்டனர். குறிப்பாக இத்தனை நாள் ஒன்னும் தெரியாத பொண்ணு மாதிரி இருந்த, லாஸ்லியா ஆண்களுக்கு சப்போர்ட் செய்து வரிந்து கட்டி கொண்டு வந்து சண்டை போட்ட காட்சியும், கதியத்தையும் பார்த்து மிரண்டு விட்டனர் ரசிகர்கள்.  

பிக்பாஸ் வீட்டில் நேற்று நடந்த பிரச்சனைகளை பார்த்து, ரசிகர்களே ஆட்டம் கண்டு விட்டனர். குறிப்பாக இத்தனை நாள் ஒன்னும் தெரியாத பொண்ணு மாதிரி இருந்த, லாஸ்லியா ஆண்களுக்கு சப்போர்ட் செய்து வரிந்து கட்டி கொண்டு வந்து சண்டை போட்ட காட்சியும், கதியத்தையும் பார்த்து மிரண்டு விட்டனர் ரசிகர்கள்.

லாஸ்லியா உண்மையில் இந்த மாதிரி சண்டை போடுவாரா என லாஸ்லியாவின் ஆர்மியை சேர்ந்தவர்களே அதிர்ந்து போய் விட்டார்கள் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்.

இந்த சண்டை வர காரணமாக இருந்தவர் என்றால், அது வனிதா என்றே சொல்லலாம். இவரை தொடர்ந்து, மது பெண்களை, ஆண்கள் பயன் படுத்தி கொள்கிறார்கள் என கூறியதால் பிரச்சனை பெரிதாக வெடித்தது.  உண்மையில் தவறு செய்த, முகேன், மற்றும் கவினை, சாண்டி, லாஸ்லியா, உள்ளிட்டோர் ஆதரித்து வருகிறார்கள்.

சில வாரங்களுக்கு முன், கவின் தன்னை ஏமாற்றினார் என அழுது விட்டு தற்போது அவருடைய கையை பிடித்து கொண்டே சுற்றுகிறார் லாஸ். அதே நேரத்தில், மது பெண்கள் மீதும் தவறு உள்ளது என கூறியும். இந்த விஷயம் பற்றி பேச வேண்டாம் என நினைக்கிறார்கள் ஒட்டு மொத்த ஆண்கள்.

நேற்றைய தினம் சந்தை கடை போல் மாறி, ஆண்கள் மற்றும் பெண்கள் கத்தி சண்டை போட்டனர். ஒட்டு மொத்தத்தில், பெண்களுக்காக பேச போய் மூக்கு உடைத்து போனது என்னவோ மதுக்கு தான். 

ஆண்கள் மேல் மட்டும் தவறு இல்லை, அபியை மேலும் தவறு உள்ளது ஊசி இடம் கொடுத்தால் தான் நூல் நுழையும் என தான் கூற வரும் விஷயத்தை மது எவ்வளவு தான் புரிய வைக்க முயற்சி செய்த போதும், அதை புரிந்து கொள்ளாத லாஸ்லியா, மிகவும் டென்ஷன் ஆகி, வனிதா அக்கா வந்து சொன்ன பிறகு தான் இந்த பிரச்சனை உங்க கண்ணனுக்கு தெரியுதா, இத்தனை நாள் வேற்று கிரகத்துல இருந்தீர்களா என மதுவை வசை பாடி விட்டு, வாயை பொத்துங்கள் என சைகை மூலம் செய்து காட்டி விட்டு உள்ளே சென்றார். பின் பதில் சொல்ல முடியாமல் அனைவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்கிறார்கள்.

ஆண்கள் அணியினர் தங்கள் மீது எந்த தவறும் இல்லை என சொல்லாமல் பழைய கதையை பேச வேண்டாம் என சொல்வது நியாயம் தான் என்று ஒரு தரப்பினரும், மது பேசுவது உண்மை உள்ளது  என்று பிக்பாஸ் ரசிகர்கள் மாறி மாறி தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள். இவர்கள் என்ன சொன்னாலும் இன்று கமல் என்ன சொல்வார்... யாருக்கு ஆதரவாக பேசுவார் என்பது இன்று தான் தெரியவரும்.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நடமாடும் அரண்மனை! SRK-ன் பல கோடி ரூபாய் வேனிட்டி வேனுக்குள் இப்படியொரு வசதியா? மிரளவைக்கும் ரகசியம்!
மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி! 'அகண்டா 3' குறித்த அதிரடி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் பாலகிருஷ்ணா ரசிகர்கள்!