கடைசிலேயே லாஸ்லியாவையும் அழ வச்சிட்டாரே பிக்பாஸ்!

Published : Jun 29, 2019, 06:45 PM IST
கடைசிலேயே லாஸ்லியாவையும் அழ வச்சிட்டாரே பிக்பாஸ்!

சுருக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த மூன்று நாட்களாக போட்டியாளர்கள் தங்களுடைய சொந்தக்கதை, சோகக்கதையை கூறி மற்ற போட்டியாளர்களை அழ வைத்து வருகிறார்கள்.  

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த மூன்று நாட்களாக போட்டியாளர்கள் தங்களுடைய சொந்தக்கதை, சோகக்கதையை கூறி மற்ற போட்டியாளர்களை அழ வைத்து வருகிறார்கள்.

இதுவரை ரேஷ்மா, மதுமிதா, கவின், தர்ஷன், என பல போட்டியாளர்கள் தங்களுடைய கதையை கூறியுள்ளனர். அதே போல் இன்றைய தினம், இலங்கை செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா அவருடைய சோகங்களை பகிர்ந்து கொள்ள உள்ளார்.

இதுகுறித்து வெளியாகியுள்ள ஒரு ப்ரோமோவில், இடம்பெற்றுள்ளது. ஆனால் இன்று கமல் தோன்றுவதால், அவர் பேசும் பிரதான காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

வழக்கம்போல் புரிந்த மொழியில் புரியாத கருத்துக்களை கூறும் கமல்ஹாசன், 'காத்திருந்து காத்திருந்து கருணை மழை பெய்தது. அன்பாய், உள்ளங்களின் உண்மை முகங்கள், உணர்வுகளை உறுதியோடு பகிர்ந்து கொண்டது ஒரு புதிய குடும்பம் பூத்திருக்கின்றது. குடும்பத்தின் தலைவனாக உங்கள் நான்' என்று கூறி புரமோவை முடித்துள்ளார். என்று என்ன கதையை லாஸ்லியா கூறவுள்ளார் என பொறுத்திருந்து பார்ப்போம்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டுவிஸ்ட் மேல டுவிஸ்ட்; வச்சான் பாரு ஆப்பு; பிக் பாஸில் வெளியேற்றப்படும் போட்டியாளர் இவரா?
பட்டு வேஷ்டி சட்டையில் மணமக்களை வாழ்த்திய தளபதி விஜய் – தயாரிப்பாளர் சிவா இல்ல திருமண நிகழ்ச்சியின் சுவாரஸ்யம்!