
பெரும் கடன் சிக்கல்களால் வெளியே தலைகாட்ட முடியாமல் தத்தளித்துக்கொண்டிருக்கும் இயக்குநர் லிங்குசாமிக்கு நடிகர் தாமாகவே உதவ முன் வந்திருப்பதாகவும் இவர்கள் இருவரும் இணையும் பட அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகக்கூடும் என்று சொல்லப்படுகிறது.
கார்த்தியின் நடிப்பில் வெளிவந்த ‘பையா’படத்துக்குப் பிறகு இயக்குநர் லிங்குசாமிக்கு சொல்லிக்கொள்ளும்படி படங்கள் அமையவில்லை. இடையில் அவர் தயாரித்த சில படங்களும் தேங்கி நிற்கவே பெரும் கடனாளியாக மாதாமாதம் சில லட்சங்கள் வட்டிகட்டிக்கொண்டிருக்கிறார் லிங்குசாமி. இந்நிலையில் அவரது நிலைமையைப் பற்றிக் கேள்விப்பட்ட நடன இயக்குநரும் டைரக்டருமான ராகவேந்திரா லாரன்ஸ் லிங்குசாமி இயக்கத்தில் இயக்கத்தில் ஒரு படம் நடித்துத்தர முன் வந்ததாகச் சொல்லப்பட்டது. ஆனால் இந்தியில் ‘லட்சுமி பாம்’படத்தை இயக்கிக்கொண்டிருக்கும் லாரன்ஸ் அப்படத்தை முடித்துவிட்டு வர மாதங்கள் ஆகும்.
இந்த சமயத்தில் இயக்குநர் லிங்குசாமியை இக்கட்டில் இருந்து மீட்க இன்னொரு ஆபத்பாந்தவனாக நடிகர் விக்ரமும் களம் இறங்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. லிங்குசாமியின் தயாரிப்பில்,அவரது இயக்கத்தில் தானாகவே முன் வந்து நடிக்க சம்மதித்திருக்கும் விக்ரம் தனது சம்பளம் குறித்துகூட எதுவுமே பேசவில்லையாம்.எது எப்படியோ வீழ்ந்து கிடக்கும் ஒரு நல்ல இயக்குநர் மீண்டும் எழுந்து வந்தால் மகிழ்ச்சிதான். விக்ரமும் லிங்குசாமியும் இதற்கு முன்னர் 2008ல் ‘பீமா’படத்தில் இணைந்து பணியாற்றினார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.