ஓட்டல் அறையில் பிக்பாஸ் நடிகையை கதற கதற செய்த பிரபல அரசியல் வாரிசு..!! சிக்கியது சிசிடீவி காட்சிகள்.!!

By Ezhilarasan BabuFirst Published Dec 5, 2019, 1:14 PM IST
Highlights

  ஒரு கட்டத்தில்  அசிஸ் கவுடு  தன் கையை பிடித்து  அறைக்குள்  இழுத்துச் சென்று தண்டை பெட்டில் தள்ளி தன்னை  வன்புணர்வு செய்ய முயன்றதாகவும்,  அப்போது சுதாரித்துக்கொண்ட தான் அவரை பிடித்து கீழே தள்ளி விட்டு அலறியடுத்து  தப்பி ஓடிவந்ததாகவும் தெரிவித்துள்ளார். 
 

பிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசியல்வாதியின் மகனை போலீசார் தேடி வருகின்றனர் .  இந்நிலையில்  அவர் தலைமறைவாகி உள்ளார் .  தமிழ் தொலைக்காட்சியில் நடந்துவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை போலவே  தெலுங்கிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி  ஒளிபரப்பாகி வருகிறது .  தமிழக மக்களைப் போலவே தெலுங்கு மக்கள் மத்தியிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி வரவேற்பு பெற்றுள்ளது .  தெலுங்கு பிக்பாஸ்2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அதிக பிரபலமானவர் பிரபல தெலுங்கு நடிகை சஞ்சனா( 27 வயது) ஆகிறது.

 

இவர் தெலுங்கானா மாநிலத்தின்  பிரபல அரசியல்வாதியின் மகன் மீது பாலியல் புகார் கூறியுள்ளார் ,  அது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .  அதாவது கடந்த சில தினங்களுக்கு முன்பு  நடிகை சஞ்சனா ஹைதராபாத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு இரவு நேரத்தில் சென்றதாகவும்,  அப்போது அங்கு வந்த தெலுங்கானா முன்னாள் எம்எல்ஏ நந்தீஸ்வர் கவுடு என்பவரின் மகன் ஆஷிஷ் கவுடு என்பவர் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.  ஒரு கட்டத்தில்  அசிஸ் கவுடு  தன் கையை பிடித்து  அறைக்குள்  இழுத்துச் சென்று தண்டை பெட்டில் தள்ளி தன்னை  வன்புணர்வு செய்ய முயன்றதாகவும்,  அப்போது சுதாரித்துக்கொண்ட தான் அவரை பிடித்து கீழே தள்ளி விட்டு அலறியடுத்து  தப்பி ஓடிவந்ததாகவும் தெரிவித்துள்ளார்.  

 நான் தப்ப முயன்றபோது என்னை  மாடியிலிருந்து கீழே தள்ளிவிட கவுடு முயற்சி செய்ததாகவும் அவர் ஒரு தெரிவித்துள்ளார் .  தன்னிடம் அவர்கள் பாலியல் அத்துமீறல் செய்ததற்கு அந்த ஓட்டலில் உள்ள சிசிடிவி காட்சிகளே சாட்சி எனவும் அவர் தெரிவித்துள்ளார் .  இந்த புகாரை அடுத்து ஆஷிஷ் கவுடு  மற்றும் அவரது நண்பர்கள் தலைமறைவாகி உள்ளனர் .  இது தொடர்பாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிசிடீவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

click me!