
இந்த நிகழ்ச்சி ஆரம்பமாகும் போதே அறிவித்துவிட்டார்.
ஆனால், போட்டியளர்களுக்கு இது தெரியாது. எனவே நாமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்கள் தங்கள் உடைகளை பேக் செய்துக்கொண்டு வெளியேற தயாராக இருந்தபோது, இந்த வாரம் யாரும் எலிமிநேட் செய்யப்படவில்லை என்பதை நிகழ்ச்சியின் முடிவில் அறிவித்தார் கமல் .
இதைதொடர்ந்து இரண்டாவது வாரத்தின் முதல் நாளான இன்று பிக்பாஸ் வீட்டின் இரண்டாவது தலைவர் தேர்வு மற்றும் நாமினேஷன் நடைபெறுவது போல் ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது.
இதில், அதிகபடியாக ஆனந்த் மற்றும் மும்தாஜ் பெயர் நாமினேட் செய்யப்படுகிறது. பின் பிக்பாஸ்சிடம் இருந்து வரும் கடிதத்தை ஜனனி படிக்கிறார்.
அதில் நித்யா உங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது, இந்த வீட்டின் சூழல் மேன்பட பிக்பாஸ் வீட்டின் தலைவியாக நீங்கள் நேரடியாக அறிவிக்கப்படுகிறீர்கள் என்று அதில் எழுதப்பட்டிருக்கிறது. இதைகேட்டதுமே போட்டியாளர்கள் செம ஷாக் ஆகிறார்கள். இதன் மூலம் பிக்பாஸ் வீட்டின் அடுத்த தலைவி நித்யா என்பது உறுதியாகியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.