சித்திரவதை செய்ததாக சொல்லப்பட்ட சிறுமியை காவல் நிலையம் அழைத்துவந்த பானுப்ரியா...

Published : Jan 25, 2019, 11:01 AM IST
சித்திரவதை செய்ததாக சொல்லப்பட்ட சிறுமியை காவல் நிலையம் அழைத்துவந்த பானுப்ரியா...

சுருக்கம்

தங்கள் வீட்டில் வேலை பார்க்கும் 14 வயது சிறுமியை நடிகை பானுப்ரியாவும் அவரது சகோதரரும் அடிமைபோல் நடத்தியதாகவும் உடல் ரீதியான தொந்தரவுகள் தந்ததாகவும் சொல்லப்பட்ட புகாரை பானுப்ரியா மறுக்கிறார்.

தங்கள் வீட்டில் வேலை பார்க்கும் 14 வயது சிறுமியை நடிகை பானுப்ரியாவும் அவரது சகோதரரும் அடிமைபோல் நடத்தியதாகவும் உடல் ரீதியான தொந்தரவுகள் தந்ததாகவும் சொல்லப்பட்ட புகாரை பானுப்ரியா மறுக்கிறார்.

ஆந்திராவைச் சேர்ந்த பிரபாவதி என்ற பெண், சந்தியா[ 14 வயது] என்கிற தனது மகளை நடிகை பானுப்ரியாவும், அவரது சகோதரரும் அடிமைபோல் நடத்துவதாகவும், சம்பளம் தராமல் இழுத்தடிப்பதாகவும் மேலும் உடல் ரீதியாகத் துன்புறுத்துவதாகவும் போலீஸில் புகார் செய்திருந்தார். அதே போல் தன் மகளை சந்திக்கவிடாமல் பானுப்ரியா சதி செய்வதாகவும் பத்மாவதி கூறியிருந்தார்.

இச்செய்தி நேற்று மீடியாக்களில் பெரும்பரபரப்பு ஆன நிலையில், பாதிக்கப்பட்ட சந்தியாவை நடிகை பானுப்ரியா, புகார் செய்யப்பட்ட காவல் அதிகாரிகள் முன்னிலையில் ஒப்படைத்ததாகவும், அவர்களிடம் சந்தியா பானுப்ரியாவோ அவரது சகோதரரோ தன்னைத்துன்புறுத்தவோ, வீட்டுக்காவலில் வைக்கவோ இல்லை என்று வாக்குமூலம் அளித்ததாகத் தெரிகிறது.

இதையடுத்து தனது தரப்பு நியாயத்தை எடுத்துச்சொல்வதற்காக விரைவில் அச்சிறுமியுடன் நடிகை பானுப்ரியா பத்திரிகையாளர்களைச் சந்திக்க திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சிரஞ்சீவி, மகேஷ் பாபு படங்களுடன் போட்டி; அரசியல் குறித்து சித்தார்த் விமர்சனம்!
நடிகை நிதி அகர்வால் மீது கைவச்சது யார்? அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய போலீஸ்