ரூ.30 கோடி வேண்டும்..ஒரே போடாக போட்ட பீஸ்ட பட இயக்குனர்..அதிர்ச்சியில் தயாரிப்பாளர்கள்..

By Thanalakshmi VFirst Published Jan 21, 2022, 9:25 PM IST
Highlights

டாக்டர் பட வெற்றிக்கு பிறகு அந்த படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் தனது சம்பளத்தை 30 கோடி ரூபாயாக மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
 

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் புதிய திரைபடம் தான் பீஸ்ட். இந்த திரைபடத்தில் தளபதி விஜய்க்கு  ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். தளபதியை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கி வரும் இயக்குனர் நெல்சன் முன்னதாக இயக்கிய டாக்டர் திரைபடமும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வெற்றி பெற்றது.

பீஸ்ட் படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அஜீத் போன்ற முன்னணி நடிகர்கள் பலரும் இவரின் இயக்கத்தில் நடிப்பதற்கு மிகுந்த ஆர்வம் காட்டி வருவதாகவும் இதனால் நெல்சன் தன்னுடைய சம்பளத்தை 30 கோடியாக உயர்த்தி உள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்தப் படத்தில் நடிப்பதற்கு சிவகார்த்திகேயனுக்கு 30 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது. இதுவே பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது டாக்டர் படத்தின் இயக்குனர் நெல்சன் சிவகார்த்திகேயனுக்கு இணையாக 30 கோடி சம்பளத்தை உயர்த்தியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.இதனால் இப்பொழுது எல்லாம் இவரிடம் வரும் தயாரிப்பாளரிடம் 30 கோடி ரூபாயுடன் தான் வர வேண்டும் என இயக்குனர் நெல்சன் கேட்டு வருகிறாராம். இதனால் இவரிடம் படம் தயாரிக்க வரும் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

click me!