
அரசே மதுவை விற்பனை செய்வதும், சிகரெட் விற்க அனுமதி அளிப்பதும் இந்த நாட்டுக்கு பெருத்த அவமானம் என இயக்குநர் பாலா தெரிவித்தார்.
புகையிலை ஒழிப்ப தினத்தையொட்டி, புகையிலைப் பழக்கத்தில் இருந்து விடுபடுவோம் என்ற நோக்கத்துடன் ஒரு மாதத்தில் புகையிலைப் பழக்கத்தை வைவிடுவோரை கவுரவிக்கும் விதமாக பிரபலங்களுடன் கொண்டாடுவோம் என்ற நிகழ்ச்சி சென்னை அடையாறு கேன்சர் இல்லத்தில் நடைபெற்றது.
ஒரு மாதத்தில் கவுன்சீலிங் மற்றும் நிகோடின் பரிசோதனை போன்ற தொடர் கண்காணிப்பில் இருந்த 39 பேர் தற்போது புகையிலைப் பழக்கத்தில் இருந்து விடுபட்டுள்ளனர்.
இவர்களை பாராட்டும் விதமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய இயக்குநர் பாலா, அரசே மது விற்பதும், புகையிலை விற்க அனுமதி அளிப்பதும் இந்த நாட்டுக்கே அவமானம் என தெரிவித்தார்.
மது, சிகரெட் போன்ற பழக்கங்களில் இருந்து விடுபட இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டாலும், மது , சிகரெட் போன்றவற்றை தடை செய்வதே மிகச் சிறந்ததது எனவும் பாலா தெரிவித்தார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.