கொரோனா பாதிப்பு: 4 கோடியை அள்ளி கொடுத்த 'பாகுபலி' நாயகன் பிரபாஸ்!

Published : Mar 27, 2020, 11:44 AM IST
கொரோனா பாதிப்பு: 4 கோடியை அள்ளி கொடுத்த 'பாகுபலி' நாயகன் பிரபாஸ்!

சுருக்கம்

தெலுங்கு திரையுலகை சேர்ந்த நடிகர்கள் கொரோனா பாதிப்பிற்கு, தங்களால் முடிந்த நிதி உதவியை, ஆந்திரா மற்றும் தெலுங்கானா முதல்வர்களின் நிதிக்கும், பிரதமரின் நிதிக்கும் கொடுத்து வருகின்றனர்.  

தெலுங்கு திரையுலகை சேர்ந்த நடிகர்கள் கொரோனா பாதிப்பிற்கு, தங்களால் முடிந்த நிதி உதவியை, ஆந்திரா மற்றும் தெலுங்கானா முதல்வர்களின் நிதிக்கும், பிரதமரின் நிதிக்கும் கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் ஏற்கனவே பிரபல நடிகர், பவன் கல்யாண் ஆந்திர மாற்று தெலுங்கானா முதல்வர்கள் நிதிக்கு ஒரு கோடியும், பிரதமரின் நிதிக்கு 1 கோடியையும் வழங்கினார்.

இவரை தொடர்ந்து இவருடைய சகோதரர்  சிரஞ்சீவி ரூ.1 கோடியும், அவருடைய மகன், ராம் சரண் தேஜா 70 லட்சமும், பிரபல நடிகர் மகேஷ் பாபு ரூ.1 கோடி என  ஆந்திரா மற்றும் தெலுங்கானா முதல்வர் நிதிக்கு கொடுத்தனர்.

இவர்களை தொடர்ந்து 'பாகுபலி' நாயகன் பிரபாஸ்...   தெலுங்கானா, மற்றும் ஆந்திர மாநில முதல்வர்கள் நிதிக்கு  ரூ.1 கோடியும்,  பிரதமரின் நிதிக்கு 3 கோடியும் கொடுத்துள்ளார்.

இவரின் இந்த செயலுக்கு ரசிகர்கள் மற்றும் மக்கள் இவரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மருமகன் மீது கொலை முயற்சி புகார்: 'கார்த்திகை தீபம் சீரியல் கார்த்திக் அதிரடி கைது!
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: வெடித்த உண்மை! மாமனாரின் தலையில் போட அண்டாவை தூக்கிய சரவணன்!