
இயக்குனர் ராஜமௌலியின் ஐந்தாண்டு தவமாக வெளியாகி இருக்கும் பாகுபலி 2 திரைப்படம் தற்போது அனைத்து தரப்பு மக்களிடமும் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.
பல பெண்கள் பாகுபலிக்கு ரசிகையாக மாரி, பாகுபலி போஸ்டர் அச்சிடப்பட்ட புடவைகளை வாங்கி அணிந்து வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது ஹைதராபாத்தில் உள்ள நகைக் கடை ஒன்றில், பாகுபலி 2 நகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பாகுபலி 2 படத்திற்கு அதிகாரப்பூர்வமாக அணிகலன்களை செய்து கொடுத்த ஹைதராபாத்தில் இயங்கி வரும் ‘அமர்பள்ளி ஜுவல்லர்ஸ்’,தற்போது பாகுபலி நகைகளை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
பாகுபலி படத்தில் பயன்படுத்தப்பட்ட 1500 வகையான நகைகளில், 1000 வகை நகைகள் இந்த கலெக்சனில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நகைகள் அனைத்தும் கைகளால் உருவாக்கப்பட்டதாம். மேலும் பலவிதமாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஜெய்ப்பூரில் உள்ள அமரபள்ளி நகைக்கடையின் கிளையில் இந்த நகைகள் அனைத்தும் உருவாக்கப்பட்டுள்ளன.இந்த நகைகள் 600 ரூபாயிலிருந்து 58,000 ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.