நடிகர் ஆர்யா 35 வயதைக் கடந்தும் இன்னும் திருமணம் செய்துக்கொள்ளாமல் இருக்கிறார். சமீபத்தில் தான் திருமணம் செய்துக்கொள்ள உள்ளதாக கூறி, ஒரு வீடியோவை வெளியிட்டு தன்னை திருமணம் செய்துக்கொள்ள விருப்பம் உள்ள பெண்கள் குறிப்பிட்ட இணையதள முகவரிக்கு அவர்களுடைய விபரங்களை அனுப்பும்படி கூறியிருந்தார்.
இவரின் பேச்சை நம்பி மொத்தம் 70,000 பெண்கள் உலகம் முழுவதிலும் இருந்து, ஆர்யாவை திருமணம் செய்துக்கொள்ள விருப்பம் தெரிவித்திருந்தனர்.
இறுதியாக 16 பெண்களை ஆர்யா தேர்வு செய்தார். தேர்வு செய்யப்பட்ட 16 பெண்களும், 'எங்க வீட்டு மாப்பிளை' என்கிற நிகழ்ச்சியில் பங்கேற்று ஆர்யா மீது தங்களுக்கு இருந்த காதலை பொழிந்தனர். மேலும் ஒவ்வொரு நாளும் சில போட்டிகள் வைக்கப்பட்டு அவர்களில் வாரம் இரு பெண்கள் என வெளியேற்றப்பட்டனர்.
கடைசியில் 'எங்கள் வீட்டு' மாப்பிளை நிகழ்ச்சியில்' மூன்று பெண்களை ஆர்யாவே திருமணம் செய்ய தேர்வு செய்திருந்தார். கண்டிப்பாக இவர்களில் ஒருவரை ஆர்யா திருமணம் செய்துக்கொள்வார் என எதிர்பார்த்த போது... தான் தற்போது குழப்பமான மனநிலையில் இருப்பதாகவும் அதனால் இந்த மூன்று பெண்களில் யாரையும் திருமணம் செய்யப்போவதில்லை என கூறி நிகழ்ச்சியின் நோக்கத்தையே வீண் செய்தார்.
இந்நிலையில் இத்தனை நாட்கள், தன்னுடைய அண்ணன் அர்யாவிற்கு திருமணம் நடந்த பிறகு தான், திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என காத்திருந்த ஆர்யாவின் தம்பி சத்யா. இனி ஆர்யாவுக்கு வெயிட் பண்ணுவது வேஸ்ட் என்று நினைத்து அவருடைய திருமணத்திற்கு ஓகே சொல்லியுள்ளார்.
சத்யாவும், துபாயை சேர்த்த பாவனா என்ற பெண்ணும் பல வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்களுடைய திருமணத்திற்கு குடும்பத்தினர் பச்சை கொடி காட்டிய நிலையில், தன்னுடைய சகோதரர் ஆர்யா திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என குடும்பத்தினர் இவருடைய திருமணத்தை தள்ளிப்போட்டு கொண்டே இருந்தனர்.
எப்படியும் இந்த வருடம் அதுவும் 'எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சி மூலம் ஆர்யாவுக்கு திருமணம் ஆகிவிடும் என அனைவரும் நினைத்த நிலையில், அந்த முயற்சியும் தோல்வி அடைந்ததால் தற்போது சத்யா திருமணத்தை நடத்த ஆர்யா குடும்பத்தினர் முடிவு செய்துவிட்டனர்.
அதன்படி, இவர்களுடைய திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி, வருகிற 22-ந் தேதி நடைபெற உள்ளது.