நாகூர் தர்காவிற்கு திடீர் விசிட் அடித்த அருண் விஜய்! இஸ்லாமியர்களுடன் சேர்ந்து தொழுகை செய்த புகைப்படம் வைரல்!

By manimegalai aFirst Published Sep 1, 2021, 4:30 PM IST
Highlights

நடிகர் அருண் விஜய், தன்னுடைய தங்கையின் கணவரான இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு தற்போது மிகவும் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், படப்பிடிப்பில் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் ஏதேனும் வித்தியாசமான விஷயங்களை செய்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். அந்த வகையில் இவர் நாகூர் தர்காவிற்கு சென்று தொழுகையில் ஈடுபட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
 

நடிகர் அருண் விஜய், தன்னுடைய தங்கையின் கணவரான இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு தற்போது மிகவும் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், படப்பிடிப்பில் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் ஏதேனும் வித்தியாசமான விஷயங்களை செய்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். அந்த வகையில் இவர் நாகூர் தர்காவிற்கு சென்று தொழுகையில் ஈடுபட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ஹரி இயக்கத்தில் கடைசியாக விக்ரம் நடித்த சாமி 2 திரைப்படம் 2018ம் ஆண்டு வெளியானது. அதன் பின்னர் சூர்யா - ஹரி கூட்டணி 6வது முறையாக ஒன்றிணையவிருந்த 'அருவா' படம் குறித்த அறிவிப்புகள் வெளியாகின. ஆனால் அந்த படத்திலிருந்து ஹரி விலகியதாக கூறப்படுகிறது. இடையில் அந்த கதையில் விக்ரம் நடிக்க உள்ளதாக கூட தகவல்கள் பரவின.

ஆனால் தற்போது சினிமாவில் நிலையான இடத்தை பிடித்து விட்ட, தனது மனைவி ப்ரீத்தாவின் அண்ணனான அருண் விஜய்யை ஹீரோவாக வைத்து ஆக்‌ஷன் கதை ஒன்றை இயக்கி வருகிறார். கிராமத்து கதையம்சம் கலந்து, ஆக்ஷன் படமாக இப்படம் உருவாகி வருகிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு ராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடந்து வந்த போது திடீர் என ரோட்டு கடைக்குள் சென்ற அருண் விஜய், அங்கு சாப்பிட்டது மட்டும் இன்றி, மீன் பொறித்த புகைப்படத்தையும் வெளியிட்டு, அந்த ஓட்டல் கடை நடத்தி வரும் அம்மாவிடம் தன்னுடைய தாயின் பாசத்தை பார்த்ததாக கூறி இருந்தார்.

இதை தொடர்ந்து இந்த படத்தின் படப்பிடிப்பு, நாகூர் பகுதியில் நடைபெற்று வருகிறது. எனவே தன்னுடைய படப்பிடிப்புக்கு அருகாமையில் இருக்கும் நாகூர் தர்காவிற்கு திடீர் என அருண் விஜய் விசிட் அடித்துள்ளார். அங்கு இஸ்லாமியர்களுடன் நன்கு பேசி பழகிய அருண் விஜய் அவர்களுடன் சேர்ந்து தொழுகையிலும் ஈடுபட்டார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. 

click me!