
நடிகர் அரவிந்த் சாமி, 'தனி ஒருவன்' படத்தில் வில்லனாக ரீ-என்ட்ரி கொடுத்தாலும், கதாநாயகன் ஜெயம் ரவியை விட, அதிகம் ரசிகர்களை கவர்ந்தார்.
கடைசியாக இவர் நடிப்பில், இயக்குனர் மணிரத்னம் இயக்கிய 'செக்க சிவந்த வானம்' திரைப்படம் வெளியாகியது. ஆனால், இந்த வருடத்தில் இவர் நடிப்பில் ஒரு படம் கூட வெளியாக வில்லை என்பது சற்று சோகமான விஷயம் தான் இவருடைய ரசிகர்களுக்கு.
இருப்பினும், அடுத்த வருடம் இவர் நடிப்பில் கிட்ட தட்ட 6 படங்கள் வெளியாக வாய்ப்பு உள்ளது. மேலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வரும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில், எம்.ஜி.ஆர்., வேடத்தில் நடித்து வருகிறார் அரவிந்த் சாமி.
இந்த படத்தில் நடிப்பதற்காக தற்போது இவர், தன்னுடைய மீசை, தாடியை மழித்து கொண்டு அடையாளம் தெரியாத அளவிற்கு உள்ளார். இது குறித்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படம் இதோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.